Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 06, 2025

கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5

Published on: சனி, 28 பிப்ரவரி, 2009 // , ,

கர்நாடக முதல்வரின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ. 4.5 கோடிபெங்களூர், பிப். 27: கடந்த 9 மாதங்களில் முதல்வர் எடியூரப்பா ஹெலிகாப்டரை பயன்படுத்தியதற்காக வாடகையாக ரூ. 4.52 கோடியை அரசு செலவு செய்துள்ளது. மாவட்டங்களுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும்போது இப்போதெல்லாம் முதல்வர்கள் ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வகையில் மற்ற முதல்வர்களை விட ஹெலிகாப்டரை முதல்வர் எடியூரப்பா அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலவையில் மதச்சார்பற்ற ஜனதாதள...

பீகார் வெள்ள நிவாரண உதவி: லாலு ரூ.40கோடி வழங்கினார்.

"கோசி ஆற்று வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பீகார் அரசு, மத்திய அரசு, அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என, ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை துடைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள அந்தப் பணியில் நாங்களும் பங்கேற்றுள்ளோம்" என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் லாலுபிரசாத் யாதவ், ரூ.40 கோடிக்கான இரண்டு காசோலைகளை பீகார் முதலமைச்சரும் தன் அரசியல் எதிரியுமான...

இந்தியா: ஹோண்டா புதிய தொழிற்சாலைத் திட்டம் கைவிடல்?

தன் இரண்டாவது இந்தியத் தொழிற்சாலையை ரூ.1000 கோடி முதலீட்டில் தொடங்க இருந்த ஜப்பானின் ஹோண்டா வாகன தயாரிப்பு நிறுவனம் அதை தற்காலம் நிறுத்திவைப்பதாக அறிவித்திருக்கிறது.பொருளாதார மந்த நிலை காரணமாக கார்களின் விற்பனை பெருமளவில் குறைந்து போனதையடுத்து ஹோண்டா நிறுவனம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் சீல் குரூப்புடன் சேர்ந்து ஹோண்டா சீல் கார்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் ஹோண்டாவுக்கு, நொய்டாவில் ஏற்கனவே ஒரு கார்...

தமிழகம்: பனிமூட்டத்தால் விமான, பேருந்து சேவைகளில்

மெல்ல தலைநீட்டிக்கொண்டிருக்கிறது கோடைக்காலம். இருந்தும் அதிகாலை நேரங்களில் தமிழ்நாட்டில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும்பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமான, பேருந்து சேவைகள் தடங்கலும் தாமதமும் அடைகின்றன.நேற்று கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானமொன்று தரையிறங்குகையில் பனிமூட்டத்தின் காரணமாக பறவையொன்றுடன் மோதியதில் விமான எந்திரத்தில் பறவையின் இறக்கை சிக்கிக்கொண்டது. என்றாலும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.இன்று காலை சென்னையிலும் கடும்பனி...

இந்திய ரூபாய் ரிக்கார்ட் வீழ்ச்சி!

தொடர்ச்சியான நான்காம் நாளான நேற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு விழ்ச்சியைச் சந்தித்தது. இதுவரை இல்லாத அளவு முதன் முறையாக டாலருக்கு 51 ரூபாய் கடந்தது.கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 50.60 ரூபாய் ஆனது. அதற்குப் பின் தற்பொழுது மிக அதிகபட்சமாக 51.60 ஆக ஆகியுள்ளது.வெளிநாட்டு வங்கிகளிலும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் டாலருக்கு அதிக தேவை...

குழந்தையின் நுரையீரலில் பல்ப்: வெற்றிகரமாக

சுமார் 2 மி.மீ நீளமும், 1 மி.மீ அகலமும் கொண்ட சிறிய பல்ப் ஒன்று சிறுமியின் நுரையீரலிலிருந்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்சம்பவம் மேற்குவங்க மாநிலம் சோனார்பூரில் நடந்துள்ளது.சோனார்பூரை சேர்ந்த நான்கு வயது சிறுமி பிராதிமா அலிம்ஜார். கடந்த வாரம் சிறிய பல்ப் ஒன்றை தவறுதலாக விழுங்கவிட அந்தச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.உணவுக்குழாயில் பல்ப் சிக்கி விட்டதாக நினைத்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சில மலமிளக்கிகள்...

இலங்கை எந்த நாட்டிற்க்கும் காலனி நாடு அல்ல-இலங்கை

இலங்கையில் போரை நிறுத்தும்படி சர்வதேச நாடுகள் வற்புறுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகே கூறியதாவது:-போரை நிறுத்தும்படி பல நாடுகள் எங்களை வற்புறுத்திவருகின்றன. இதற்காக நாங்கள் வளைந்து கொடுக்க முடியாது. விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்த பின்தான் போரை நிறுத்துவோம். போர் கடைசி கட்டத்தில் இருக்கும் போது எப்படி அதை நிறுத்த முடியும்?சில நாடுகள் எங்களை போரை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்கின்றன. நாங்கள் அவர்களின் காலனி...

மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல்

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தின் 7ஆம் நினைவு நாளான வெள்ளிக் கிழமையன்று, மோடியின் செல்வாக்கை அதிகரிக்க மின் அஞ்சல் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.குஜராத் மாநில முதல்வராக குஜராத்திற்கு அவர் செய்த சாதனைகளை மறைத்து, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சுமத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனவே கோத்ரா இரயில் எரிப்பு நாளான இன்று இந்த மின் அஞ்சல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது...

ஹோலோகாஸ்ட் பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன்

ஹோலோகாஸ்டை மறுத்து வந்த இங்கிலாந்து பிஷப்பின் மன்னிப்பை வாட்டிகன் ஏற்க மறுத்துவிட்டது. தன்னுடைய கருத்தை அவர் மனப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.தன்னுடைய கருத்து மற்றவர்களின் மனதை இந்த அளவு பாதிக்கும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் என் கருத்தை நான் தெரிவித்திருக்க மாட்டேன் என்று இங்கிலாந்தைச் சார்ந்த பிஷப் ரிச்சர்டு வில்லியம்சன் தெரிவித்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் தனக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் அவ்வாறு...

இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் தேதியை அறிவித்தார்

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக் கிழமையன்று அறிவித்தார்.கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் இராக்கிலிருந்து 16 மாதங்களுக்கு அமெரிக்கப் படைகளைத் திரும்பெறுவேன் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தார். அவரது வாக்குறுதிக்கு 3 மாதங்கள் அதிகமாக 19 மாதங்களில் அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப் படுவார்கள் என்று அறிவிக்கப்...

மார்ச் 1 முதல் குறைகிறது தொலைபேசிக் கட்டணங்கள்!

Published on: வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 // , ,

மார்ச் 1-ஆம் தேதி முதல் பி.எஸ். என்.எல். நிறுவனம் லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசுகளாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசுகளாகவும் குறைக்கிறது.இத்தகவலை மாநிலங்களவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.இந்தியா கோல்டன் 50 என்ற புதிய திட்டம் மூலம் பிரீபெய்டு மொபைல் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும்...

பங்களாதேஷ் பேருந்து சேவை

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையே இருந்து வந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அகர்தலா - டாக்கா, டாக்கா - கொல்கத்தா பேருந்து சேவை மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப் படுவதாக பங்களாதேஷ் சாலைப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.பங்களாதேஷ் நிலைமை திரிபுரா மாநிலத்தைக் கவலை கொள்ளச் செய்வதாக அம்மாநில முதல்வர் மானிக் சர்கார் கூறியுள்ளார்....

கோத்ரா கலவர வழக்கு மீண்டும்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கோத்ரா கலவர வழக்கை குஜராத் காவல்துறை மீண்டும் தொடங்கி உள்ளது.குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பாரூக் சேக் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கப்பட்டது. மனித உரிமை அமைப்புகள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோத்ரா கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த 1958 வழக்குகளையும் மீண்டும் தொடர மாநில காவல்துறைக்கு உத்தரவிடடதாக அந்த பதிலில் தெரிவிக்கப் பட்டது.1958...

லட்ச ரூபாய் கார் மார்ச் 23ம் தேதி முதல்

ஒரு லட்ச ரூபாய் காரான நானோ மார்ச் 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் 1ந் தேதி முதல் இந்த கார் டாடா மோட்டார்ஸ் டீலர்களிடம் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.ஏப்ரல் 2ம் வாரம் முதல் நானோ காருக்கான புக்கிங் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்பதிவு மற்றும் இதர...

பாகிஸ்தான் மரியாட் நட்சத்திர விடுதியில் தீ விபத்து!

Published on: வியாழன், 26 பிப்ரவரி, 2009 // , ,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். தீ விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மரியாட் விடுதியின் மீது மோதச் செய்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதில் அயல்நாட்டினர் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.தற்கொலைத் தாக்குதல் காரணமாக கடுமையாகச் சேதமடைந்த மரியாட்...

முதல்வர் கருணாநிதி ராம.கோபாலன்

முதல்வர் கருணாநிதியை, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் சந்தித்துப் பேசினார். முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரத முடிவைக் கைவிட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.கலைஞரிடம் நலம் விசாரித்த ராம. கோபாலன், வக்கீல்கள் போலீஸாருக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்ற அறிவிப்பை கைவிட வேண்டும். உங்களது...

சாலை விபத்துகளில் 22ஆயிரத்துக்கும் அதிகமான மரணம்!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 2004 மற்றும் 2006 ஆண்டுகளுக்கிடையில் 22, 841 பேர் மரணமடைந்ததாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப் பட்டது.கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் முனியப்பா இதனைத் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு 6, 438 பேரும், 2005 ஆம் ஆண்டு 8,090 பேரும், 2006 ஆம் ஆண்டு 8,313 பேரும்...

யாஹூ நிறுவனம் கைப்பெட்டியை மூடுகிறது!

உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைச் சேமித்துக் கொள்ளும் சேவையான யாஹூ கைப்பெட்டி (Yahoo! Breifcase) சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இலவசமாகவும் கட்டணம் பெற்றும் இச்சேவையை வழங்கி வந்த யாஹூ நிறுவனம் வரும் மார்ச்சு மாதம் 30ஆம் நாளுடன் இந்தச் சேவையை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாகவும், அதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்கள் கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கோரியும் வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல்களை அனுப்பி உள்ளது.கட்டணம்...

வழக்குரைஞர்கள் காவலர் மோதல் விசாரிக்க உச்சநீதிமன்றக் குழு!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் இடைக்கால விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் கோரியுள்ளது.காவல்துறையின் அத்துமீறல் குறித்து விசாரிக்கம் வேளை, நீதிமன்றத்திற்குள் காவலர்களை நுழைய உத்தரவிட்ட காவல்துறை...

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சாருக்கு தங்கப்பதக்கம் கேரள அரசு

ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக் கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆஸ்கார் விருதை வென்ற மூவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.மூவருக்கும் வசதியான ஒரு நாளில் இந்தப் பாராட்டு விழா நடத்தப்படும்...

முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு மூன்றாண்டு சிறைத்

Published on: புதன், 25 பிப்ரவரி, 2009 // , , , , ,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 2 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி மகேஷ்வரி இந்த தீர்ப்பை அளித்தார். பின்னர் 50 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை அளித்ததைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார்.150 பக்கங்கள் கொண்டிருந்த இந்த வழக்கின் தீரப்பை வாசித்த நீதிபதி மகேஷ்வரி, ஊழல்...

விண்ணில் வெடித்துச் சிதறியது அமெரிக்க

தாரஸ் எக்ஸ் - எல் என்ற அமெரிக்க விண்கலமொன்று கலிபோர்னிய விண்தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறி அட்லாண்டிக் கடலில் விழுந்தது.விண்ணில் கார்பன் டை ஆக்சைடின் சதவீதத்தை அறிவதற்காகவும், பூமியில் தட்ப வெப்ப மாற்றங்களை அறிவதற்காகவும் இவ்விண்கோள் செலுத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.விண்கலம் ஏந்திச்சென்ற செயற்கைக்கோள் அதிலிருந்து பிரிவடையும் நேரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்விபத்து நேரிட்டதாக நாசா கூறி உள்ளது. ரூ.1300 கோடி செலவில்...

வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாக போய்விடும்-நீதிபதி

பார் கவுன்சிலுக்கு தரமான இளம் வக்கீல்கள் வராவிட்டால் வக்கீல் தொழிலில் ஒழுக்கமும், அறநெறியும் கனவாகப் போய்விடும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் வேதனையுடன் கூறினார்தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தேசிய வழக்காடு போட்டி சென்னையில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்தும் 16 சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு உச்சநீதிமன்ற...

ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் இன்று அறிவித்துள்ளது.ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும்...

பட்ஜெட் ப்ளஸ்: 29,000 கோடிக்கு

இந்தியாவின் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில நாள்களுக்கு முன் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வரிச்சலுகை ஏதும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், நிதிஅறிக்கை மீதான விவாதம் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது 29,000 கோடிக்கு புதிய வரிச்சலுகைகளை அமைச்சர் அறிவித்தார்.அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன் பேச்சில் உற்பத்தி வரி மற்றும் சேவை வரிகள் தலா 2 சதவீதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்டுமானத்...

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பதவி

நடுவண் மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று அமைச்சரவையிலிருந்து விலகினார். தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜெய்ராம் ரமேஷ், நிருபர்களிடம் 'தேர்தல், கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக' அமைச்சர் பதவியை விட்டு நீங்குவதாகத் தெரிவித்தார்மாநிலங்களவை உறுப்பினராக ஆந்திராவிலிருந்து ஜெய்ராம் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ...

இந்தியா: டீசல் விலை மேலும் ரூ.2 குறைகிறது?

டீசல் விலையை இரண்டு கட்டமாக ரூ.4/= குறைக்க மத்திய அரசு கடந்த டிசம்பரில் முடிவு செய்திருந்தது. அதன்படி மத்திய அமைச்சரவை கூடி முதற்கட்டமாக ரூ.2/= குறைக்க முடிவெட்டியுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாளையே மத்திய அமைச்சரவை கூட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.டீசல் விலையை குறைத்தால் பணவீக்கம் குறையும். வாகன போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருட்களின் விலை குறையும் என்பதாக...

துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!

ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக...

நவாஸ் ஷரீஃபுக்கு விதித்த தடை உறுதி!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃபுக்கும் அவரது சகோதரர் ஷாபாசுக்க்கும் பாகிஸ்தான் அரசில் பங்கு வகிக்க நடத்தப்படும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட லாகூர் உயர் நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.நவாஸ் ஷரீஃபின் கட்சியான PML-N மேற்கு பஞ்சாபில் மிகவும் பலம் வாய்ந்ததாகும். நவாஸ் ஷரிஃபின் சகோதரர் ஷாபாஸ் தான் அங்கு முதல்வராக இருக்கிறார். பாகிஸ்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஷாபாசும்...

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தைகளுக்கு

ஸ்லம் டாக் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருதீன் இஸ்மாயில் மற்றும் ருபினா ரபீக் ஆகிய குழந்தைகளுக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.ஸ்லம் டாக் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வாங்கியதை அடுத்து பல்வேறு இடங்களிலிருந்தும் அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இத்திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களான அசாருத்தீன் இஸ்மாயில் சேக் உஸ்மான் மற்றும் ருபினா...

காஷ்மீரில் வேலை

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக்...

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன....

உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தை அகற்றுக- உச்ச நீதிமன்றம்.

சென்னை வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. தற்போது முக்கியத்துவம் கருதி இம்மனு 25-ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கடந்த வியாழக்கிழமை...

நடுவர் ஸ்டீவ் பக்னர்

மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் ஸ்டீவ் பக்னர் வரும் மார்ச் மாதம் முதல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். 62 வயதாகும் பக்னர், 126 டெஸ்ட் மற்றும் 179 ஒரு நாள் போட்டிகளில் நடுவராக பணியாற்றி சாதனை படைத்துள்ளார். தொடர்ச்சியாக 5 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்றதும் அவரது சாதனைகளில் ஒன்று.62 வயதாகும் தனக்கு மேலும் ஒன்றிரண்டு வருடங்கள் நடுவராக செயல்பட இயலும் என்றாலும் ஓய்வு...

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் : பி.டி.பி.

Published on: செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 // , , , , ,

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியள்ளது.சோபூர் நகரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது துண்பியல் நாடகம் என்று வர்ணித்த மக்கள் ஜனநாயகக் கட்சி, கஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSP) நீக்க வேண்டும் எனவும், மாநிலத்தில் உள்ள இராணுவனத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அப்பாவிகளைக் கொலை...

கூகிள் மின்மடல் (ஜிமெயில்) சேவையில் தடங்கல்!

கூகிள் வழங்கி வரும் பல சேவைகளில் ஒன்று ஜிமெயில் எனப்படும் மின்மடல் சேவை. இச்சேவையை இலவசமாகவும், நிறுவனங்களுக்குக் கட்டண சேவையாகவும் கூகிள் வழங்கி வருகிறது. இச்சேவையில் நேற்றும் இன்றும் தடங்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை கூகிளும் உறுதி செய்துள்ளது.ஜிமெயில் சேவை 99.9 விழுக்காடு பயனுறத் தக்கதாக இருக்கும் என கூகிள் தனது சேவை வாக்களிப்பில் உறுதியளித்திருந்தாலும், இரு நாட்களாக ஏற்பட்டுவரும் தடங்கல் அதன் இலவசப் பயனாளர்களையும் கட்டணப்...

ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு நாடாளுமன்ற அவைகளில் பாராட்டு!

ஸ்லம் டாக் திரைப்படத்திற்கு 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருப்பதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தலைமையிலும், மாநிலங்களவைக் கூட்டம் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலும் இன்று நடைபெற்றது. மூன்று இந்தியர்களுக்குக் கிடைத்த இந்த அகாடமி விருதுகள் இந்தியக் கலைஞர்களுக்கான சர்வதேச அங்கீகாரம் என்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனை இது என்றும் கூறப்பட்டது.மக்களவைக் கூட்டம்...

"முதல்வரின் உண்ணாவிரத அறிவிப்பு வெறும் கண்துடைப்பு" -

வக்கீல் போலீஸ், ஒற்றுமைக்காக உண்ணாவிரதம் இருப்பேன் என்று முதல்அமைச்சர் கருணாநிதி கூறியிருப்பது கண்துடைப்பு நாடகம் போல் தான் இருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும் போராட்டத்தை தடுப்பதற்காகவும் அதை திசை திருப்புவதற்காகவும் எங்கள் அணிக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் எங்கள் மீது அவதூறுகளை பேசி வருகிறார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மருத்துவர் இராமதாசுடன் வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகிய தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் உடனிருந்தனர்.


உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு காரணமான அதிகாரிகளை இதுவரையில் ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்று கேட்ட இராமதாசு "எங்களை பார்த்து சதிகாரர்கள் என்கிறீர்களே! ஐகோர்ட்டில் நடந்த சம்பவத்திற்கு யார் சதி செய்தது? தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அந்த சதிகாரர் யார்? இதை முதலமைச்சர் கருணாநிதி விளக்க வேண்டும்" என்று கோரினார்


மேலும் அவர் பேசுகையில்...

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்துவதை விட்டு விட்டு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும் என்று கூறி வருகிறீர்களே? போர் நிறுத்தம் ஏற்பட்டால் நீங்கள் சொன்னது நடந்து விடாதா? முதல் கட்டத்தை விட்டு விட்டு கடைசி கட்டத்துக்கு போய் விட்டீர்களே? முதல் தேவை போர் நிறுத்தம் தானே! என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சம்பளக்கணக்கில் தவறிழைத்த

பொருளாதார நெருக்கடியில் உலகம் முழுதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திணறி போயுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனமும் 5,000 ஊழியர்களை அடுத்த 18 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக கடந்த ஜனவரி 22ம் தேதி 1,400 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி அவர்களுக்கு இழப்பீடும் வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்கியதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தவறு நடத்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது. சில ஊழியர்களுக்கு பணம் அதிகமாகவும், சிலருக்குக் குறைவாகவும்...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இராணுவப்

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு அமெரிக்க இராணுவத்தார் பயிற்சி அளித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தியை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்க வேண்டும் என்று அமெரிக்க இராணுவம் பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. 70 அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் போர் நிபுணர்கள் இந்தப் பயிற்சியை அளித்து வருவதாகவும் 8 மாதத்துக்கு மேலாக இந்தப் பயிற்சி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.இதற்கு பாகிஸ்தான்...

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை

தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தற்காலிக தலைமை நீதிபதியாக முகோபாதயா செயல்பட்டு வருகிறார். அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிவரும் எச்.எல்.கோகலேவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.இதற்கு குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டார். மும்பை நீதிமன்றத்தைல் 1994ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோகலே, பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு...

புலிகள் போர் நிறுத்தம்: இலங்கை ஏற்க

புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஐ நா, ஐரோப்பிய யூனியன்,பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி மூலமாக அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தினமும் 50ல் இருந்து 100 அப்பாவித் தமிழர்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே, 2,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்; 5,000 பேர் படுகாயம்...

"அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை" -

'அத்வானி பிரதமராக வாய்ப்பில்லை' என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இனவாதமும், பயங்கரவாதமும் உடன்பிறந்த சகோதரிகள். பா ஜ க ஒரு இனவாதக் கட்சி என்பது வெளிப்படை. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற லாலு தான் இம்முறை சரண் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறினார்.
தன்னுடைய சாப்ரா தொகுதி சீரமைப்பில் சரண் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய அவர் உயர்ந்த சாதியில் உள்ள ஏழைகளுக்குப் பயன்தரும் வகையில் அமைப்பு வாரியான சட்டத்திருத்த மசோதாவுக்கு தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என்றார்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம்

கல்விதான் வலிமையான நாடாக மாற்றும்: ப.சிதம்பரம் சிங்கம்புணரி, பிப். 22: கல்விதான் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றும். ஆகவே, கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி வரை படிக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை பாரத ஸ்டேட் வங்கியின் புதிய கிளையைத் திறந்துவைத்து, அவர் பேசியது: இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. ஆனால், 25 கோடி மக்கள் வறுமையில்...

"ஒன்றுபடாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன்" -

Published on: திங்கள், 23 பிப்ரவரி, 2009 // , , , , , ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்ட உருக்கமான அறிக்கையில் வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் இணக்கமாகச் செல்லும்படி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் துவங்கிய அறவழிக்கிளர்ச்சியில் தாங்களும் ஓரணியில் வந்து நிற்பதாகக் கூறிவிட்டு ஆரம்பத்திலேயே அந்த அணியைச் சிதைக்க, இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள இரண்டு, மூன்று நண்பர்கள் ஈடுபட்டதை தமிழ்நாடு நன்கறியும். திமுக காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கு அதில் தொடர்பு இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தங்களுக்கென தனிவழி வகுத்துக் கொண்டவர்கள்.


அந்த நண்பர்களுக்கு இப்போது இலங்கையில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல. அந்த கோஷத்தை வைத்து தமிழகத்தில் தங்கள் அரசியலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் முக்கியம்.அதனால் தான், தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் கூட்டணியை உடைப்பதற்கு மக்களிடத்தில் தவறான பிரசாரங்களைச் செய்தும், யார் தமிழகத்தில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக கிளர்ச்சி நடத்தினாலும், அங்கே போய் புகுந்துகொண்டு அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, அதை பூதாகாரமாக ஆக்கி, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காணுகின்றனர்.
எதிர்பாராத விதமாக திடீரென துருதிர்ஷ்டவசமாக வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதல் அவர்களுக்குப் பிரதான ஆயுதமாகக் கிடைத்திருக்கிறது.


அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு, இன்னும் தையல் பிரிக்காத நிலையில், தினசரி உடல்நலிவோடு மருத்துவமனையில் இருக்கிற என் மனம் நோகும்படி, என்னென்ன காரியங்களை இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படுகின்றன என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். இதற்கு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் பலியாகிவிடக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள். அவர்கள் தங்களுக்கிடையே இடையே ஏற்பட்டுள்ள கசப்பை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று நான் தொடர்ந்து வேண்டிக் கொண்டுவருகிறேன். இந்த அரசு அடித்தட்டிலே உள்ள ஏழை எளிய மக்களுக்கு எல்லா வகையான சாதனைகளையும் செய்ய வேண்டும் என்பது தான்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கு அறிந்தோ, அறியாமலோ பலியாகிவிடக்கூடாது. இரு தரப்பும் இந்த அரசில் சகோதரர்கள் போல ஒன்றுபட்டு நற்பணி புரிய வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், பல நீதிபதிகளும் ஒரு சுமுகமான சூழ்நிலை இந்த இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் போராட தூண்டிக் கொண்டிருக்கும் சிலர் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள்; ஜனநாயக நெறிகளை உயர்வடையச் செய்ய ஒத்துழையுங்கள்; நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க ஆர அமர அமர்ந்து பேசி நல்ல முடிவுகளை எடுப்போம்.அப்படி ஒன்றுபட முடியாவிட்டால், நீங்கள் ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையில் இருக்கிற நான் உண்ணாநோன்பு இருப்பதாக முடிவு செய்திருக்கிறேன்.அந்த முடிவை நான் மேற்கொள்வதா, இல்லையா என்பதை நீங்கள் அளிக்க இருக்கிற விடையின் மூலம் தெளிவு பிறந்து, அதற்கான தேதியை விரைவில் அறிவிக்கிறேன்.


முதலமைச்சர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு வரன் தேடித்தரும் மகளிர்

ஜம்செட்பூர் மகளிர் கல்லூரி அந்நகரின் புகழ் பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. படிப்பை முடித்த மகளிருக்கு திருமணத்திற்காக வரன் தேடித்தரும் பொறுப்பை தானே ஏற்க அக்கல்லூரி முன்வந்துள்ளது. அதற்காக சுயம்பார் என்ற அமைப்பை அது தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுக்லா மொஹந்தி தெரிவித்துள்ளார். இது அக்கல்லூரியின் சமூகவியல் துறையின் யோசனையாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.வரதட்சணை கோராத மாப்பிள்ளைகளின்...

'போர் நிறுத்தத்துக்குத் தயார்'- புலிகள்

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது நடந்துவரும் கடும் சண்டையால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இவ்வறிவிப்பை புலிகளின் அரசியல் தொடர்பாளர் நடேசன் ஐநாவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயாராக இருந்தாலும் ஆயுதங்களைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் போர் நிறுத்தத்தை இலங்கை இராணுவம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை...

ஏ.ஆர் ரகுமானுக்கு ஆஸ்கர் விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த இசை அமைப்பாளர் ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டுள்ளது. ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கிலப் படத்திற்கு ரகுமான் அமைத்த இசையினால் இவ்விருது இவருக்கு வழங்கப்படுகிறது.இதற்கு முன் இதே படத்திற்கு இவர் அமைத்த இசைக்காக கோல்டன் குளோப், பாஃப்டா போன்ற விருதுகளை இவர் வென்றெடுத்திருந்தார். இந்தியர் ஒருவர் ஆஸ்கர் விருதினைத் தட்டிச் செல்வது இதுவே முதன்முறையாகும்.மும்பை சேரிப்...

இந்தியா கோல்டன் 50: 50 பைசாவில்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் மூன்றாம் தலைமுறை '3 ஜி' சேவை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப் பட்டது. இதன்படி இந்தியாவின் எந்த பகுதிக்கும் 50 காசுகளில் பேசும் 'இந்தியா கோல்டன் 50' எனும் திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் துவக்கப்படுகிறது. தமிழக முதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் இச்சேவையை அறிமுகப்படுத்தினார். 3 ஜி சேவையில் உள்ள 'வீடியோ...

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!

நெருக்கடியில் டிராவல்ஸ் நிறுவனங்கள்!கோவை, பிப். 21: சர்வதேச நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்ப (ஐடி) நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வந்த இலவச வாகன போக்குவரத்து வசதியை ரத்து செய்ய துவங்கியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களுக்கு கார்களை இயக்கி வந்த டிராவல்ஸ் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா வங்கிகளில் ஏற்பட்ட சரிவு, பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக அமைந்தது. இதனால் அமெரிக்கா தகவல்...

சீனா: நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 74 பேர்

Published on: ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 // , , , , ,

சீனாவின் சான்க்ஸி மாகாணத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட பெருவெடிப்பில் சிக்கி 74 பேர் பலியாகியுள்ளனர். 114 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சுமார் 400க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ, பிரதமர் வென் ஜிபாவோ மீட்புப்பணிகளை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளனர். சீனாவில் கடந்த ஒரு வருட காலத்தில் இது...

இந்தியா: வாகனம் ஓட்டும்போது தொலைபேசினால் ரூ.5000

வாகனம் ஓட்டும் போதும் கைபேசியில் பேசுவது அதிகரித்து வருவதால ஏராளமான விபத்துகள் நடக்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.வண்டி ஓட்டும் போது தொலை பேசினால், முதல் முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை இதே குற்றம் தொடர்ந்தால் 5,000 ரூபாய் அபராதத்தோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்...

ஒரிசாவில் வேன் மீது இரயில் மோதி 13 பேர்

ஒரிசாவில் கல்யாண நிகழ்விற்குச் சென்று கொண்டிருந்த வேன் மீது இரயில் மோதி 13 பேர் பலியானார்கள்.ஒரிசா மாநிலம் பார்கர் நகருக்கு அருகில் ஆளில்லா கிராசிங்கில் இன்று மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் நடந்தது. மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் கல்யாண நிகழ்விற்குச் சென்ற மணப்பெண் உள்பட 13 பேர் பலியானார்கள். மேலும் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.சம்பவத்தைக் கேள்விப்பட்ட அருகில் இருந்த கிராம மக்கள் மீட்புப் பணியில்...

ராஜ் தாக்கரேவை கைது செய்ய நீதிமன்ற

வட இந்தியாவில் கொண்டாடப்படும் 'சாட்' என்னும் திருவிழாவைப் பற்றி தவறான கருத்து கூறியதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தக்கரே மீது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜ் தாக்கரே இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிந்திர குமார் சின்கா, வழக்கை முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சூரத், கடந்த டிசம்பர் மாதம் தாக்கரேவுக்கு...

திருச்சியில் புதிய விமானநிலைய முனையம்

திருச்சியில் புதியதாகக் கட்டப்பட்ட விமானநிலைய முனையத்தை நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மத்திய தகவல்-தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தலைமை வகித்தார். ஒருஇலட்சத்து எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாயிரம் சதுர அடி ஓடுபாதையாக உள்ளது. விரைவில் ஓடுதள அளவு பத்தாயிரமாகவும், பின்னர் படிப்படியாக பன்னிரண்டாயிரம் சதுர அடியாகவும் விஸ்தரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வளர்ந்துவரும் பெருநகரான திருச்சியில்...

கோவை சிறையில் கைதிகள் சிறைக்காவலர் இடையே

கோவை சிறையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 சிறைக்காவலர்கள் உள்பட15 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பாலசுப்ரமணி, சுப்ரமணியன், செந்தில் குமார் ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இலேசான காயம் என்பதால் புற நோயாளியாகவே சிகிச்சப் பெற்று திரும்பியதாகவும் சிறைக் கண்கானிப்பாளர் கோவிந்தராஜ் கூறினார்.சிறையில் உள்ள சுமார் 1500 பேருக்கும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் போட்டுக் காட்டியதாகவும்,...

திருப்பூர் மாவட்டம் உதயம்!

தமிழகத்தின் 32ஆவது மாவட்டமாக திருப்பூர் இன்று துவக்கி வைக்கப் பட்டது. இதன் துவக்கவிழா இடுவம்பாளையம் அரசு பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடந்தது. இவ்விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தைத் துவக்கி வைத்தார்.முன்னதாக திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார். திருப்பூர் உருவாக்கத்திற்கு இவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்...

அத்வானி பிரதமராக தெலுங்கு தேசம் ஆதரவளிக்காது!

அத்வானி பிரதமராவதற்கு தெலுங்கு தேசம் ஆதரவளிகாது என்று தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியமைத்தால் தெலுங்கு தேசம் ஆதரிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்தக் கேள்வியே எழாதும் என்றும் கூறினார். தங்களுடைய கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்போ அல்லது...

தமிழகம்: போக்கிரிகளை கண்டதும் சுட

Published on: சனி, 21 பிப்ரவரி, 2009 // , , , ,

பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் யாரையும் கண்டதும் சுட தமிழக காவல்துறைத் தலைவர் ஆணையிட்டுள்ளார்.கடந்த வியாழனன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்-காவலர்களிடையே நடைபெற்ற கலவரத்தை காரணங்காட்டியும், ஈழத்தமிழர் பிரசினை என்ற உணர்ச்சிப் போர்வையிலும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கும் போக்கிரிகள் யாரையும் கண்டதும் சுடும்படி தமிழக காவல்துறைத் தலைவர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் கடந்த இருநாள்களாக, நான்கு பேருந்துகள், நான்கு தீயணைப்பு வாகனங்கள், பதினான்கு இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. ...

அலிகர்: நீதிமன்ற வளாகத்தில் 5 பேர்

அலிகர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகளை கூலிப்படையைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.இதையடுத்து பணியிலிருந்த காவலர்கள் திருப்பிச் சுட்டதில் அந்த மூன்று கொலையாளிகளும் செத்து வீழ்ந்தனர்.நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டால், கொலைகளால், நகரில் பதற்றம் நிலவுகிறது. ...

போலி என்கவுண்டர்: ஆதாரங்களுடன் ஜாமியா மில்லியா ஆசிரியர்கள்!

ஜாமியா மில்லியா மாணவர்களை டில்லி பாட்லா ஹவுஸில் வைத்து காவல்துறை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஜாமியா மில்லியா கல்லுரியின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இவை, டில்லி என்கவுன்டர் குறித்து காவல்துறை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு எதிரானவைகளாகும்.பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையினை காவல்துறை இதுவரை வெளியிடாததற்கானா காரணம் என்ன என்றும் ஏதாவது உண்மைகளை மறைத்து வைப்பதற்காகவே காவல்துறை அதனை...

விடுதலைப்புலிகள் வான்

விடுதலைப்புலிகள் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 48 பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.இலங்கையின் விமானப்படைத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள உள்நாட்டு வருவாய் அலுவலகம் மீது ஒரு விமானம் மோதியதாகவும் மற்றொரு விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சுட்டு வீழ்த்தப் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட இத்தாக்குதலையடுத்து கொழும்பு முழுவதும் மின்...

இந்திய தபால் துறை ஆண்டுக்கு ரூ.500 கோடி நஷ்டத்தில்!

இந்திய தபால் தந்தி துறை ரூ.500 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மக்களுக்கு 26 விதமான சேவைகளை வழங்கிவரும் இத்துறையில் 20 சேவைகள் அரசின் மானிய உதவியாலே வழங்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.2005-06ம் ஆண்டு 1,200 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம், 2007-08ம் ஆண்டு 1,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தனியார் கூரியர் நிறுவனங்கள் பற்றியும் அவைகளின் வருமானம்...

ஒசாமா வாழ்விடம்: அமெரிக்கப் பேராசிரியர்கள்

ஒசாமா பின் லாதன் எங்கு மறைந்திருக்கக் கூடும் என்பதை அமெரிக்க புவியியல் துறை பேராசிரியர்கள் தாமஸ் கில்லெஸ்பி மற்றும் ஜான் அக்னியு ஆகியோர் செயற்கைக் கோள் புகைப்படங்கள், புவியியல் முறைகள் மூலம், தர்க்க ரீதியாக கண்டுபிடித்துள்ளனர்.இவர்கள் ஆய்வின் படி, பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் உள்ள பராசினார் நகரில் உள்ள மலைகளில், ஒசாமா ஒளிந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில், 19 கி.மீ., தொலைவில் பராசினார்...

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனை

2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பாந்தட்டப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளின் விற்பனை தொடங்கப் பட்டுள்ளது.64 ஆட்டங்கள் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைப் போட்டிகளைக் காண சுமார் 30 இலட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.முதல்கட்ட விற்பனையில் நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏப்ரல் மாதம் குலுக்கல் முறையில் சிலர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.குறைந்த கட்டணமுள்ள சுமார் 4,50,000 சீட்டுகள் தென் ஆப்பிரிக்கர்களுக்கென்று...

சரணடைய ஊர்வலமாக வந்த சீமான் கைது!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் சீமான் பங்கேற்றுப் பேசி வந்தார்.நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள்...

இரயில்வேயில் 1,70,000 பணியிடங்கள் காலி!

இந்திய இரயில்வேயில் 1, 70, 000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக வியாழக் கிழமையன்று அரசு அறிவித்துள்ளது.நாடாளு மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளிக்கையில் மத்திய இரயில்வே இணை அமைச்சர் வேலு இதனைத் தெரிவித்தார். இவற்றில் 32,600 பதவிகள் எஸ். சி., எஸ்.டி., மற்றும் பிற்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் என்றும் அவர் கூறினார்.ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்றும் பொதுவான இடங்களுக்கும் பணி நியமனங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,...

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க.

பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல்...

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக...

16 மாத குழந்தையைக் கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

தன்னுடைய 16 மாத வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு டெல்லி மாநகரநீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 40 வயதான ஓம் பிரகாஷுக்கு டெல்லி மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலோக் அகர்வால் ஆயுள் தண்டனையும் ரூ. 2000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.ஓம் பிரகாஷ் சாராய பாட்டிலைக் குழந்தையின்...

ஹோலேகாஸ்டை மறுக்கும் பாதிரியார் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற உத்தரவு!

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பிவரும் பாதிரியார் ரிச்சர்ட் வில்லியம்சன் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது.அர்ஜென்டினா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பத்து நாட்களுக்குள் அவர் அர்ஜென்டினாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.முன்னதாக 1988ஆம் ஆண்டு திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இவரையும் மேலும் மூன்று பாதிரியார்களையும் மீண்டும் திருச்சபையுடன் இணைத்து கடந்தமாதம் போப் உத்தரவிட்டிருந்தார். போப்பின் இந்த முடிவு...

சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள்

உயர்நீதி மன்றத்தில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக சட்டசபையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவர்கள் அவையிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டனர். கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து, சென்னை உயர்நீதி மன்ற மோதல் விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால், தமிழக சட்டசபையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது . சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விவாதிக்க வேண்டும்...

மாலேகாவ்ன் : ஆர் எஸ் எஸ்ஸுக்கு எஸ் பணம் ?

Published on: வியாழன், 19 பிப்ரவரி, 2009 // , , , , , ,

மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர் தயானந்த் பாண்டே என்பவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் பொதுச்செயலர் மோகன் பகவத், ஆர் எஸ் எஸ்ஸின் முஸ்லிம்பிரிவு தலைவர் இந்த்ரேஷ் குமார் ஆகியோர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ எஸ் ஐ இடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதாகவும், இத்தகவலை ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தே தன்னிடம் தெரிவித்ததாகவும்...

சினிமா விமர்சனம் : நான்

நான் கடவுள்ரஸ்ஸல்கதை, திரைக்கதை, இயக்கம்: பாலாவசனம்: ஜெயமோகன்இசை: இளையராஜாதன் மகனால் சொத்து ,சுகம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் என்று சொன்ன சோதிடனின் பேச்சை நம்பிப் பதினாலு வருடங்களுக்கு முன், சாஸ்திரம் படிக்க என்று மனைவியிடம் சொல்லிக் காசியில் தொலைத்த மகனைத் தேடித் தன் மகளுடன் காசிக்குத் தந்தை வருவதுடன் கதை துவங்குகிறது.காசிப்பண்டிட்டின் உதவியுடன்,தலைமைச் சாமியாரைச் சந்தித்து மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்லத் தந்தை கெஞ்ச, "நீ அஹம்...

ஈழப்பிரசினையில் இன்னுமொருவர்

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான தமிழ்வேந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர்களுக்காக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் பேசினார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவர் இலங்கை தமிழர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தனது நெருங்கிய நண்பர்களிடம் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப்போகிறேன் என்று...

காங்கிரஸ்ஸில் அஸ்ஹருத்தீன் : இரண்டாவது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக 90களில் செயற்பட்டவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அஸ்ஹருத்தீன். தனது கிரிக்கெட் வாழ்வை சூதாட்டப் பிரசினையால் முடித்துக்கொண்ட அஸ்ஹருத்தீன் இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸாக அரசியல் வாழ்வை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியைச் சந்தித்து காங்கிரஸ் அடிப்படை உறுப்பினராக அவர் சேர உள்ளதாக ஒரு செய்தியை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே அஸ்ஹருத்தீன்...

"இலங்கைக்கு ஆயுதம் வழங்கவில்லை" -

நேற்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்து பேசுகையில் அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா (உள்ளிட்ட சில உறுப்பினர்கள் "இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குகிறதா? இல்லையா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பிரதமர் பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் பதில் அளிக்கையில் "இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுதங்கள் வழங்கவில்லை இலங்கை தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வேறு நாடுகளில் இருந்து வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ தீர்வு காண முடியாது என்றும் அரசியல் ரீதியில்தான் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

"நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும்"

நேபாளத்தில் அமைதி ஏற்பட இந்தியா உதவும் என்று நேபாளம் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். அவர், அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தகால், முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேசினார்.

"நேபாளத்தில் ஜனநாயக நடைமுறைகள் தொடர்ந்து நீடிப்பதற்கும், அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்."நேபாள பிரதமருடன் நடத்திய பேச்சில் இரு தரப்பு உறவை பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நேபாளத்துடன் தொடர்ந்து நல்ல உறவை வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்" என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத்

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட...

இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்படாது :

இரயில் நிலையங்களுக்குத் தலைவர்களின் பெயர் சூட்டப்படாது என்று மத்திய இரயி்ல்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார். நாடாளுமன்றத்தில் இடைக்கால இரயில்வே பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவரது கட்சியைச் சார்ந்த ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) என்ற உறுப்பினரின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.இரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் வைக்க ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சகம் தடை விதித்ததாகவும் அந்த உத்தரவு இன்றும்...

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில்...

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on: புதன், 18 பிப்ரவரி, 2009 // , , ,

மணிப்பூரில் நடந்து வரும் முழு அடைப்பினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.அரசு அதிகாரியும் அவருடன் பணியாற்றி இரு அதிகாரிகளும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பில் ஈடுபட்டவர்கள் சகோல்பந்த், கக்வா, யும்னாம் மற்றும் லீகய் உள்ளிட்ட இடங்களில்...

வன்னிப் பகுதியில் 108 பேர்

வன்னி பகுதியில் இன்று அதிகாலை இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் 108க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர்.புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய ஊர்களைக் கொண்ட பாதுகாப்புப் பகுதி என்று புதிதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நீடித்த இந்த தாக்குதலின்போது கொத்து குண்டுகள்...

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத்

தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதனை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின் படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மூலம் தேர்தல் ஒரே நாளில் நடந்தால் தேர்தல் முடிந்த 48 மணி நேரம் வரையும், பல கட்டங்களாக நடந்தால் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு...

20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள்

11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 20 தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இவ்வாறு கூறியுள்ளார்.அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. தீவிவாதிகளின் தாக்குதலை முறியடித்தல் மற்றும் அவசர கால...

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் - 2வது

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார்.ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் சாந்து முகம்மது அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார். அவர் மீது காவல்துறையில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும்,...

டென்னிஸ் தரவரிசை: சானியா

Published on: செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 // , , , , ,

பாட்டயா டென்னிஸ் போட்டி இறுதியாட்டம் வரை வந்த இந்தியாவின் சானியா மிர்ஸா மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.இப்போட்டிக்கு முன் தரவரிசையில் 126 ஆவது இடத்தில் இருந்த சானியா, இப்போட்டியில் இறுதியாட்டம் வரை வந்ததால் 39 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 87 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.அதேபோல் இரட்டையர் பிரிவில் இறுதியாட்டம் வரை சென்ற இந்தியாவின் போபண்ணா இரட்டையர் தரவரிசையில் 78ம் இடத்தைப் பெற்றுள்ளார். இரட்டையர் தரவரிசையில் லியாண்டர் பயஸ்,...

இலங்கை: கருணா இயக்கத்தில்

இலங்கையில் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தக் கட்சியின் பிள்ளையான் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி நடத்தி வருகிறார். கருணா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.இந்நிலையில், கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கருணாவிடம் விளக்கம் கேட்கப்பட்டு கட்சித்தலைமையிலிருந்து அறிவிக்கை அனுப்பிவைக்கப்பட்டதாம். கருணா விளக்கம் தராததால் அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம்

சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி...

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த...

பாண்டிச்சேரி: விமானநிலையம் செயற்பட

பாண்டிச்சேரியில் கட்டப்பட்டு வரும் விமான நிலையம் எதிர்பார்த்தபடி வரும் மார்ச் மாதம் செயற்படாமல் போகலாம் என்றும் அது செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என்றும் தெரிகிறது. இத்தகவலை துணைநிலை ஆளுநர் கோவிந்த்சிங் குர்ஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஓடுபாதையையொட்டி கட்டப்பட்டிருக்கும் பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு, அது வெளியில் வருவதால் அதனை சரி செய்ய வேண்டியிருக்கிறது...

ராஜ்தாக்கரே தலைமறைவு என நீதிமன்றம்

மகராஷ்டிரா நிர்மான் சேனா தலைவர் தலைமறைவு என ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே பீகார் மக்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருந்ததை அடுத்து சுதீர் குமார் பப்பு என்ற வழக்கறிஞர் தாக்கரே மீது 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் வருமாறு நீதிமன்றம் பலமுறை அறிவிக்கை அனுப்பியும் ராஜ் தாக்கரே வரவில்லை.இதனை அடுத்து ஜாம்ஷெட்பூர்...

சுப்ரமணிய சுவாமி மீது முட்டை வீசித்

சென்னை உயர்நீதிமன்றம் வந்த ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி மீது அழுகிய முட்டைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி முன்னிலையிலேயே இச்சம்பவம் நடந்தேறியது.சிதம்பரம் கோயில் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றம் வந்திருக்கையில் திடீரென நுழைந்த வழக்கறிஞர்கள் சிலர் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசுவதால் சுப்பிரமணிய சுவாமி‌யை தாக்குவதாகக் கூறி அவருக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க...

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!