Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

அமைச்சருக்கெதிரான விசாரணையை மேற்கொள்ள குஜராத் நீதிபதி மறுப்பு!

Published on வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 2/20/2009 01:05:00 PM // , , , , ,

குஜராத் மாநில அமைச்சர் மாயா கொடானி மற்றும் விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெயதீப் பட்டேல் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன். வேறொரு நீதிபதி விசாரிப்பார் என்றும் விசாரணை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதி ஆனந்த் தவே இதற்காக காரணத்தைக் கூறவில்லை.


முன்னதாக மாநகர அமர்வு நீதிமன்ற நீதிபதி அஷ்வனி, மாநில கல்வித்துறை அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத்தலைவருக்கும் முன்ஜாமீன் இந்த மாதம் 5ஆம் தேதி அளித்தார்.

குஜராத் கலவரம் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து. இதுகுறித்த விசாரணைக்கு நேரில் வருமாறு மாநில அமைச்சருக்கும், விசுவ இந்து பரிஷத் தலைவருக்கம் சிறப்பு விசாரணைக் குழு பலமுறை அறிவிக்கை அனுப்பியும் இருவரும் ஆஜராகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!