Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் : பி.டி.பி.

Published on செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 2/24/2009 07:01:00 PM // , , , , ,

கஷ்மீரில் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் மாநிலக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியள்ளது.

சோபூர் நகரில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது துண்பியல் நாடகம் என்று வர்ணித்த மக்கள் ஜனநாயகக் கட்சி, கஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSP) நீக்க வேண்டும் எனவும், மாநிலத்தில் உள்ள இராணுவனத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் அப்பாவிகளைக் கொலை செய்வதை தனி ஒரு நிகழ்வாகப் பார்க்க இயலாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் ஆயுதங்களுடன் இருப்பது மனித உரிமைக்கு விடுக்கும் அச்சுறுத்தல் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

முகமது அமீன் மற்றும் ஜாவீத் அகமது என்ற இளைஞர்கள் கடந்த சனிக்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த போது இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தீவிரவாதிகள் மக்களுடன் பதுங்கியிருந்த போது இராணுவத்தினர் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வின் போது மேலும் இருவர் காயமுற்றதாகவும் அதில் ஒருவர் இறந்திருக்கக் கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!