Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

திருச்சியில் புதிய விமானநிலைய முனையம்

Published on ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 2/22/2009 09:18:00 PM // , , , , ,

திருச்சியில் புதியதாகக் கட்டப்பட்ட விமானநிலைய முனையத்தை நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு மத்திய தகவல்-தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தலைமை வகித்தார். ஒருஇலட்சத்து எட்டாயிரம் சதுர அடி பரப்பளவில் இப்புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டாயிரம் சதுர அடி ஓடுபாதையாக உள்ளது. விரைவில் ஓடுதள அளவு பத்தாயிரமாகவும், பின்னர் படிப்படியாக பன்னிரண்டாயிரம் சதுர அடியாகவும் விஸ்தரிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
வளர்ந்துவரும் பெருநகரான திருச்சியில் பிரம்மாண்டமான விமானநிலையம் அமைய அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் ரகுபதி, தமிழக அமைச்சர்கள் நேரு, செல்வராஜ், திருச்சி மக்களவை உறுப்பினர் கணேசன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ்ஸின் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!