Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சட்டக்கல்லூரி மோதல்: இது பாண்டிச்சேரி சம்பவம்

Published on செவ்வாய், 17 பிப்ரவரி, 2009 2/17/2009 09:41:00 PM // , , , , ,

புதுவை மாநிலத்தில் காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ஈழப்பிரச்னையை முன்னிட்டு இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த வலியுறுத்தி நகரின் மையப்பகுதியில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். கடந்த 11ம் தேதியிலிருந்து மூன்று நாள்களாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இரண்டாம் வருட மாணவர்கள் சிலர் கலந்துகொள்ளாமல் வகுப்புகளுக்குச் சென்று வந்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாய்த்தகராறு ஏற்பட்டு முதலாம் ஆண்டு படிக்கும் வில்லியனூரைச் சேர்ந்த மாணவர் அன்புமணி, பெரம்பலூரைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர் சுரேஷ் வயிற்றில் திடீரென கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டாராம்.
சம்பவம் குறித்து காலாப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை யடுத்து, மாணவர்கள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறினர். கல்லூரியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!