Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்பு படையினர் கிளர்ச்சி

Published on புதன், 25 பிப்ரவரி, 2009 2/25/2009 01:56:00 PM // , , , , ,

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது தலைமை அலுவலகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்று காலை முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்தினருக்கம் துப்பாக்கிச் சன்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மேல் இராணுவ ஹெலிகாப்டர் மூலம் கண்கானிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டாக்கா முழுவதும் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

இதுவரை இந்த சன்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஆறு பேர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இராணுவத்தை எந்த வகையிலும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களுடைய ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாததையடுத்து இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பாதுகாப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு அதன் தலைமையகத்தில் வங்கதேசப் பிரதமர் சேக் ஹசீனா நேற்றைய தினம் விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருந்த நிலையில் இக்கிளர்ச்சி நடைபெற்றுள்ளது.

இரு தரப்பும் ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாகவும் வங்க தேச அரசு அறிவித்துள்ளது.

1 கருத்து

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!