Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

இலங்கை எந்த நாட்டிற்க்கும் காலனி நாடு அல்ல-இலங்கை

Published on சனி, 28 பிப்ரவரி, 2009 2/28/2009 04:28:00 AM // , , ,

இலங்கையில் போரை நிறுத்தும்படி சர்வதேச நாடுகள் வற்புறுத்துவது தொடர்பாக இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகே கூறியதாவது:-

போரை நிறுத்தும்படி பல நாடுகள் எங்களை வற்புறுத்திவருகின்றன. இதற்காக நாங்கள் வளைந்து கொடுக்க முடியாது. விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்த பின்தான் போரை நிறுத்துவோம். போர் கடைசி கட்டத்தில் இருக்கும் போது எப்படி அதை நிறுத்த முடியும்?

சில நாடுகள் எங்களை போரை நிறுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்கின்றன. நாங்கள் அவர்களின் காலனி நாடு அல்ல அவர்கள் சொல்லை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கை ஜனநாயக நாடு. எனவே மக்கள் சொல்வதை மட்டுமே நாங்கள் கேட்போம்.

விடுதலைப்புலிகள் அரசை எதிர்த்து போராடுகிறார்கள். அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி சர்வதேச நாடுகளோ, அல்லது அமைப்புகளோ எங்களை வற்புறுத்த கூடாது. எங்களுடைய உணர்வுகளுக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்க வேண்டும் , என்று கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!