Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கடல் வழி அணு ஆயுதக் கடத்தலுக்கு வாய்ப்பு : கப்பற்படைத் தலைவர்

Published on வியாழன், 19 பிப்ரவரி, 2009 2/19/2009 11:21:00 AM // , , , , ,

இந்தியாவின் கடல்பகுதி வழியாக அணுஆயுதங்கள் கடத்தப்படும் சாத்தியம் உள்ளதாக கப்பற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். "பலவீனமாக உள்ள இந்திய கடல் பகுதிகள் வழியாக ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களை சரக்கு கன்டெய்னர்கள் மூலம் கொண்டுவர முடியும்" என்றார் அவர்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் மேலும் கூறுகையில் "உலக அளவில் சரக்கு போக்குவரத்தில் 70 முதல் 75 சதவீதம், கன்டெய்னர்கள் மூலமாகவே நடக்கிறது. சட்ட விரோதமாக அணு ஆயுதங்களை கடத்த பயங்கரவாதிகளும் இந்த முறையை பயன்படுத்தலாம். அதனால், இந்த விஷயத்தில் உயரிய பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். முறையான பரிசோதனை மற் றும் ஸ்கேனிங் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். நூறு சதவீத பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாம் செயல்பட வேண்டும்" என்றார்

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!