Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பாகிஸ்தானின் அணு ஆயுதம் ஐ.நா.வின் கட்டுபாட்டில் : பா.ஜ.க.

Published on வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 2/20/2009 01:20:00 PM // , , , , , , , ,

பாகிஸ்தானிய அரசு பல்வேறு வகைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் கேந்திரமாகவும் விளங்குகிறது. எனவே பாகிஸ்தானின் அனு ஆயுதத்தை ஐக்கிய நாடுகள் சபை உடனே தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தாலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளின் கைகளில் சென்றுவிட வாய்ப்பு இருப்பதால், பாகிஸ்தானின் அணு ஆயதங்கள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுமைக்குமே அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாநிலத்தில் ஷரீயத் சட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பது தாலிபான்களிடம் அரசு சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்று கூறிய அவர், பாகிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!