Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இந்தியா: வாகனம் ஓட்டும்போது தொலைபேசினால் ரூ.5000 அபராதம்

Published on ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 2/22/2009 09:36:00 PM // , , , , ,

வாகனம் ஓட்டும் போதும் கைபேசியில் பேசுவது அதிகரித்து வருவதால ஏராளமான விபத்துகள் நடக்கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வண்டி ஓட்டும் போது தொலை பேசினால், முதல் முறையாக 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை இதே குற்றம் தொடர்ந்தால் 5,000 ரூபாய் அபராதத்தோடு, ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்ற சட்டத்தை மத்திய அரசு யோசித்து வருகிறது.


இதற்கு வகை செய்யும் விதமாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குழு ஏற்கனவே இதற்கு பரிந்துரை அளித்துள்ள நிலையில், சட்டத்தைக் கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கார் ஓட்டும் போது தொலைபேசினால், சில மாநிலங்களில் 100ல் இருந்து 300 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை சிறிதாக இருப்பதால், அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை. இதன் காரணமாகவே, சட்டத்தைக் கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 கருத்து

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    tamilblogger குழுவிநர்

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!