Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹரியானா முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் - 2வது மனைவி

Published on புதன், 18 பிப்ரவரி, 2009 2/18/2009 01:28:00 PM // , , ,

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார்.

ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் சாந்து முகம்மது அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கலாம் என்று அவரது இரண்டாவது மனைவி பிஜா நேற்று கூறினார். அவர் மீது காவல்துறையில் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறினார்.

தான் கற்பழிக்கபட்டதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும், தன்னுடை மத உணர்வு புண்படுத்தப்பட்டதாகவும் பிஜா திங்கள் கிழமையன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சாந்து முகம்மது மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இஸ்லாமிய மதத்திலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதா பாலி என்ற பிஜா உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில அரசு துணை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் பஜன்லாலின் மகனான சாந்து முகம்மது என்ற சந்தர் மோகன் ஹரியானா மாநில துணை முதல்வராக இருந்தவர்.

1 கருத்து

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!