Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

வழக்குரைஞர்கள் காவலர் மோதல் விசாரிக்க உச்சநீதிமன்றக் குழு!

Published on வியாழன், 26 பிப்ரவரி, 2009 2/26/2009 03:35:00 PM // , , , , , , ,

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினருக்கும் வழக்குரைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன் இடைக்கால விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் வழங்கவும் கோரியுள்ளது.

காவல்துறையின் அத்துமீறல் குறித்து விசாரிக்கம் வேளை, நீதிமன்றத்திற்குள் காவலர்களை நுழைய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!