Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

எச்1பி விசா பிரச்சனை : அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்க

Published on வியாழன், 19 பிப்ரவரி, 2009 2/19/2009 02:28:00 AM // , , , , , , ,

அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெறும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வேலைக்கமர்த்தக் கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே நிதி உதவி அளிக்கப் படுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க பொருள்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் கோரியுள்ளது.

இந்த நிபந்தனை வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்கப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துவோம் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.

இந்த நிபந்தனைகளால் பிரச்சனை ஏற்படாது என்று அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கருதினால் அது அவர்களின் அறியாமையையே வெளிப்படுத்தும். உகாண்டா, பிஜி தீவுகள் மற்றும் ஒபாமாவின் பூர்வீக நாடான கென்யா போன்ற நாடுகளில் இருந்த இலட்சக் கணக்கான இந்தியர்கள் எந்தவித கருணையும் இல்லாமல் விரட்டப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அவர் கோரினார். அமெரிக்காவின் இந்த நிபந்தனை தளர்த்தப்படாவிட்டால் இந்தியாவில் உள்ள 14 அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களைப் புறக்கணிக்கக் கோரும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்றும் அவர் கூறினார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!