துருக்கி விமானம் நொறுங்கி விழுந்தது!
ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நொறுங்கி விழுந்ததில் குறைந்தது 20 பேர் காயமுற்றனர்.
134 பயணிகளுடன் இருந்த அந்த விமானம் ஓடுதளத்திற்கு சற்று உயரத்தில் மூன்று துண்டுகளாக நொறுங்கி விழுந்தது என்றும் ஆனால் தீப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. 134 பேர் பயணம் செய்ததாக விமான நிறுவனமும், 143 பேர் பயணம் செய்ததாக துருக்கி போக்குவரத்து அமைச்சரும் கூறியுள்ளனர்.
ஒருவர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாயின. ஆனால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை என விமான நிறுவன அதிகாரி கூறினார். உயிர் பலி எதுவும் இல்லை என துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் கூறினார். ஆனால் ஆறுபேர் இச்சம்பவத்தில் பலியானதாக டச்சு வானொலி தெரிவித்தது. விமானத்தின் சிதறிய பாகங்களிலிருந்து சுமார் 20 பேர் எழுந்து சென்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
இவ்விபத்து குறித்த அவசரத் தகவல்களுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +90 800 219 8035