Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹோலோகாஸ்டை மறுத்த பாதிரியார்கள் மீண்டும் கிருஸ்துவ திருச்சபையுடன் இணைப்பு!

Published on சனி, 24 ஜனவரி, 2009 1/24/2009 06:00:00 PM // , , ,

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதப்படுகொலைகளைப் பற்றிய சந்தேகங்களை எழுப்பியதற்காக 1988-ஆம் ஆண்டு 4 பிஷப்கள் வாடிகன் கிருஸ்துவ திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களை போப் பெனடிக்ட் மீண்டும் திருச்சபையுடன் இணைத்துக் கொண்டார். இது யூதத் தலைவர்களை கோபமடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஹிட்லரின் நாஜிப்படையினரால் யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வு 'ஹோலோகாஸ்ட்' என வரலாற்றில் பதியப் பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இச்சம்பவங்களை உண்மை என ஏற்றுக் கொண்டிருந்தாலும் சிலர் அவற்றைப் பற்றிய சந்தேகங்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறான சந்தேகங்களை எழுப்புவது பல ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த குற்றத்தை புரிந்ததற்காகவே 4 பிஷப்களும் திருச்சபையிலிருந்து நீக்கப் பட்டிருந்தனர்.


நால்வரில் ஒருவரான பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் வில்லியம்சன் ஹோலோகாஸ்ட் பற்றி கூறப்படுபனவற்றை மறுத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சுவீடன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், யூதர்களைக் கொல்வதற்காக விஷ வாயு கிடங்குகள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்தார். அச்சம்பவங்களில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 60 லட்சம் என்று சொல்லப்படுவதையும் அவர் மறுத்து, அதன் உண்மையான எண்ணிக்கை 3 லட்சம் மட்டுமே இருக்கும் எனவும் அவர் கூறினார்.

நான்கு பிஷப்களையும் மீண்டும் திருச்சபையில் இணைக்கும் உத்தரவை போப் வெளியிடுமுன்பாக பல யூதத் தலைவர்கள் போப்பின் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தனர். பல்லாண்டுகளாக நிலவி வரும் யூத கிருஸ்துவ சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை இது குலைத்து விடும் எனவும் 'ஆழமானதொரு காயத்தை இது மீண்டும் கிளறி விடும்' எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!