Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பங்களாதேஷ் பேருந்து சேவை

Published on வெள்ளி, 27 பிப்ரவரி, 2009 2/27/2009 03:39:00 PM // , , , , ,

பங்களாதேஷில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, டாக்காவிலிருந்து கொல்கத்தா மற்றும் அகர்தலா இடையே இருந்து வந்த பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகர்தலா - டாக்கா, டாக்கா - கொல்கத்தா பேருந்து சேவை மறு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப் படுவதாக பங்களாதேஷ் சாலைப் போக்குவரத்துக் கழகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பங்களாதேஷ் நிலைமை திரிபுரா மாநிலத்தைக் கவலை கொள்ளச் செய்வதாக அம்மாநில முதல்வர் மானிக் சர்கார் கூறியுள்ளார். ஆனால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்களாதேஷ் எல்லையைத் தீவிரமாகக் கண்கானித்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.

பங்களாதேஷுடனான வர்த்தக பரிமாற்றங்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய சுங்கத் துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!