Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

திருமணத்துக்கு வரன் தேடித்தரும் மகளிர் கல்லூரி

Published on திங்கள், 23 பிப்ரவரி, 2009 2/23/2009 05:33:00 PM // , , , , ,

ஜம்செட்பூர் மகளிர் கல்லூரி அந்நகரின் புகழ் பெற்ற கல்லூரிகளுள் ஒன்றாகும். கடந்த ஆண்டு அக்கல்லூரி தன்னாட்சி அதிகாரம் பெற்றது. படிப்பை முடித்த மகளிருக்கு திருமணத்திற்காக வரன் தேடித்தரும் பொறுப்பை தானே ஏற்க அக்கல்லூரி முன்வந்துள்ளது. அதற்காக சுயம்பார் என்ற அமைப்பை அது தொடங்க உள்ளதாக கல்லூரி முதல்வர் சுக்லா மொஹந்தி தெரிவித்துள்ளார். இது அக்கல்லூரியின் சமூகவியல் துறையின் யோசனையாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரதட்சணை கோராத மாப்பிள்ளைகளின் விண்ணப்பங்களே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற கல்லூரி முதல்வர், தன் பெண்பிள்ளைகள் படிப்பில் சிறக்க பெற்றோர் ஆர்வங்காட்டுவதற்காகவே 'படிப்பை முடித்திருக்கவேண்டும்' என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டதாகக் கூறினார்

பெண்பிள்ளைகளின் படிப்புக்கு பொறுப்பேற்கும் நாமே அவர்களின் பிற்கால நல்வாழ்வுக்கும் ஏன் உதவக்கூடாது என்று தோன்றிய எண்ணத்தின் விளைவே இந்த யோசனை என்றார் கல்லூரி முதல்வர்

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!