Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை

Published on புதன், 18 பிப்ரவரி, 2009 2/18/2009 01:33:00 PM // , , ,

தேர்தல் நேரத்தில் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அதனை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் விதிகளின் படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவு மூலம் தேர்தல் ஒரே நாளில் நடந்தால் தேர்தல் முடிந்த 48 மணி நேரம் வரையும், பல கட்டங்களாக நடந்தால் இறுதிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும். அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் இந்தத் தடை உத்தரவு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கருத்துக் கணிப்பு வெளியட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி இருந்தது.

1 கருத்து

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!