Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Wednesday, April 16, 2025

கோவை சிறையில் கைதிகள் சிறைக்காவலர் இடையே

Published on ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 2/22/2009 09:16:00 PM // , , , , , ,

கோவை சிறையில் கைதிகளுக்கும் சிறைக்காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. இதில் 8 சிறைக்காவலர்கள் உள்பட15 பேர் காயமுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலசுப்ரமணி, சுப்ரமணியன், செந்தில் குமார் ஆகிய மூன்று சிறைக்காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு இலேசான காயம் என்பதால் புற நோயாளியாகவே சிகிச்சப் பெற்று திரும்பியதாகவும் சிறைக் கண்கானிப்பாளர் கோவிந்தராஜ் கூறினார்.

சிறையில் உள்ள சுமார் 1500 பேருக்கும் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் போட்டுக் காட்டியதாகவும், படம் முடிவடைந்தவுடன், அவரவர் செல்லுக்கு உடனே திரும்ப வேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த கைதிகள் அவர்களுடை சன்டையில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

கைதிகள் சிறையிலிருந்த கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சிறைக் காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 8 சிறைக்காவர்களும் 7 கைதிகளும் காயமுற்றதாக சிறை தகவல்கள் கூறுகின்றன.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!