Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

காஷ்மீரில் வேலை

Published on புதன், 25 பிப்ரவரி, 2009 2/25/2009 03:01:00 PM // , , ,

கடந்த நான்கு தினங்களுக்கு முன் இரு இளைஞர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்கும் முகமாய் அரசு கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போன்ற சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவினைவாத இயக்கங்கள் இந்தக் கொலைகளைக் கண்டித்து இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதை அடுத்து ஸ்ரீநகர் மற்றம் கஷ்மீரின் முக்கிய நகரங்களில் காவல் துறை மற்றும் இராணுவம் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

முகம்மது அமீன் தன்தாரி மற்றம் ஜாவித் அகமது என்ற இளைஞர்கள் சோபூரில் கடந்த 4 நாட்களுக்கு முன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். பிர்தோஸ் என்ற மற்றொரு இளைஞர் காயமுற்றார். இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிறன்னு சோபூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்நதது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!