Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, குல்சாருக்கு தங்கப்பதக்கம் கேரள அரசு முடிவு

Published on வியாழன், 26 பிப்ரவரி, 2009 2/26/2009 07:35:00 AM // , , , , , , ,

ஆஸ்கார் விருது பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலிக் கலவை நிபுணர் ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஆஸ்கார் விருதை வென்ற மூவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடத்தி தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

மூவருக்கும் வசதியான ஒரு நாளில் இந்தப் பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!