Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ராஜ் தாக்கரேவை கைது செய்ய நீதிமன்ற ஆணை

Published on ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009 2/22/2009 09:29:00 PM // , , , , , , ,

வட இந்தியாவில் கொண்டாடப்படும் 'சாட்' என்னும் திருவிழாவைப் பற்றி தவறான கருத்து கூறியதாக, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தக்கரே மீது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராஜ் தாக்கரே இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிந்திர குமார் சின்கா, வழக்கை முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றினார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்சூரத், கடந்த டிசம்பர் மாதம் தாக்கரேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தார். ஆனால், தாக்கரே முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு நீதிபதி கைது ஆணை பிறப்பித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!