Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

சரணடைய ஊர்வலமாக வந்த சீமான் கைது!

Published on வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 2/20/2009 07:20:00 PM // , , , , ,

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் அவர்களிடம் பிடிபடாமல் ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் சீமான் பங்கேற்றுப் பேசி வந்தார்.

நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், காலவர்களிடம் அகப்படாமல் தப்பித்தார். கடந்த இரு தினங்களாக காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர்.

சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.

இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

இந்நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.

அப்போது அவரை காவலர்கள் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் பாண்டிச்சேரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படக் கூடும்.

முன்னதாக முன்ஜாமீன் கேட்டு சீமான் பதிவு செய்திருந்த வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதி மன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!