Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை

Published on செவ்வாய், 24 பிப்ரவரி, 2009 2/24/2009 02:35:00 PM // , , , ,

தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, தற்காலிக தலைமை நீதிபதியாக முகோபாதயா செயல்பட்டு வருகிறார். அலகாபாத் தலைமை நீதிபதியாக பணியாற்றிவரும் எச்.எல்.கோகலேவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.இதற்கு குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் ஒப்புதல் அளித்துவிட்டார்.

மும்பை நீதிமன்றத்தைல் 1994ம் ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கோகலே, பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1995ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, மும்பை உயர்நீதிமன்றத்துக்கே மீண்டும் மாற்றப்பட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, 2007ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நியமிக்கப்பட்டார். இப்போது சென்னை உயர்நீதிமன்றத் தலைமைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் சில மாநில உயர்நீதிமன்றங்களிலும் தலைமை மாற்றம் இருக்கும் எனத் தெரியவருகிறது

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!