Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

16 மாத குழந்தையைக் கொன்ற வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை!

Published on வெள்ளி, 20 பிப்ரவரி, 2009 2/20/2009 12:48:00 PM // , , , , ,

தன்னுடைய 16 மாத வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு டெல்லி மாநகரநீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

2004ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடந்த இந்த கொடூர செயலைச் செய்த 40 வயதான ஓம் பிரகாஷுக்கு டெல்லி மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அலோக் அகர்வால் ஆயுள் தண்டனையும் ரூ. 2000 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ஓம் பிரகாஷ் சாராய பாட்டிலைக் குழந்தையின் தலையில் அடித்துப் பின்னர் குழந்தையைச் சுவற்றின் மீது தூக்கி வீசி கொலை செய்ததாக அவரது மனைவி கீதா புகார் அளித்திருந்தார்.

கீதா கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த அவனது கணவன் கீதாவைக் கண்டித்ததாகவும், பின்னர் இருவருக்கும் சன்டை ஏற்பட்டு இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய பிரகாஷின் வழக்கறிஞர், அவர் வேண்டுமென்றே இப்படிச் செய்யவில்லை என்று வாதிட்டார்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!