Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on புதன், 18 பிப்ரவரி, 2009 2/18/2009 05:54:00 PM // , , ,

மணிப்பூரில் நடந்து வரும் முழு அடைப்பினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

அரசு அதிகாரியும் அவருடன் பணியாற்றி இரு அதிகாரிகளும் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு உள்ளூர் அமைப்புகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பில் ஈடுபட்டவர்கள் சகோல்பந்த், கக்வா, யும்னாம் மற்றும் லீகய் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கைளச் சேதப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மணிப்பூர் முழுவதும் கடைகள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலும் மிகக் குறைவான அளவிலேயே வருகை இருந்தது. மாநிலத்திற்குள்ளும் மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் ஓடவில்லை. தலைநகர் இம்பாலில் பல்வேறு சாலைகளிலும் டயர்கள் கொழுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!