படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!
லிபியாவின் கடல்பகுதியில் படகு கவிழ்ந்து 300 க்கு மேற்பட்ட ஆப்ரிக்கர்கள் மரணமடைந்ததாக சந்தேகம். ஐரோப்பாவில் குடியேற சிறிய படகுகளில் சட்டவிரோதமாக புறப்பட்ட ஆப்ரிக்க குழுக்களின் படகுகள், மோசமான காலநிலையில் தகர்ந்ததாக அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ...