படகு கவிழ்ந்து 300 பேர் பலியானதாக சந்தேகம்!
இப்படகுகளில் 300க்கும் மேற்பட்டவர்கள் பிரயாணம் செய்திருப்பர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 23 நபர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.
1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.
இயக்குனர் பாலச்சந்தர் ரொம்ப வருடத்துக்கு முன் என்னையும் ரஜினியையும் அறிமுகம் செய்தார். பல ஆண்டுகள் எங்கள் ஆதிக்கம் நீடிக்கிறது. இப்போது நிறைய புதியவர்கள் வருகிறார்கள். இதுவரவேற்கத் தக்கதாகும். புதுமுக நடிகர்கள் தங்கள் திறமைகள் மூலம் என்னையும் ரஜினியையும் மீறி நல்லநடிகர்களாக வர வேண்டும்.
நான் நடிகன். எனக்குத் தெரிந்தது நடிக்க மட்டும்தான். எனக்குத் தெரிந்த வேலையை செய்யத்தான் நான் விரும்புவேன். எனக்கு தெரியாத தகுதி இல்லாத வேலைக்கு போக மாட்டேன்.
எனது படங்கள் அமெரிக்கர்களுக்காக எடுக்கப்படவில்லை. இந்திய மக்களுக்காக எடுக்கப்படுகிறது. இந்தியர்கள் ஆமோதிப்பதில் கிடைக்கும் திருப்தி போதும். ஆஸ்கார் விருது என்பது அமெரிக்க ஸ்டாண்டர்டு படங்களுக்கு வழங்கப்பட கூடியது. என்படங்களில் இந்திய ஸ்டாண்டர்டு தான் உள்ளது. எனக்கு ISI முத்திரை இருக்கிறது. ASI முத்திரை வேண்டியதில்லை.
எனக்கு ஹாலிவுட் படங்களில் பேசும் அளவு ஆங்கிலம் வராது.
ஹாலிவுட் நடிகர்களை தமிழ் தெலுங்கு பேசவைத்து இங்குள்ள படங்களில் நடிக்க செய்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நான் ஆங்கில படங்களில் நடித்தால் இருக்கும்.
பொருளாதார ரீதியான சில கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்கள் போனதும் படம் ஆரம்ப மாகும். மருதநாயகம் படமும் கைவிடப்பட வில்லை. கண்டிப்பாக முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருதநாயகம் எனது கனவுப் படம் இல்லை. என் குழந்தை. அதில் என் இளமைப்பருவ காட்சியை ஏற்கனவே எடுத்து முடித்து விட்டேன். வயதான பாத்திரங்கள் தான் மீதம் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் எம்.பி யும் நடிகருமான கோவிந்தா வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தன் விருப்பமின்மையைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல நடிகை நக்மாவை தேர்தலில் நிறுத்த காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். பின்னர் அ.தி.மு.கவில் இருந்து விலகி தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கினார். அந்த கட்சியை கலைத்து விட்டு தே.மு.தி.க. வில் இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை பொது செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மார்ச் 30 ஆம் தேதி முதல் கொல்கத்தா-லண்டன் விமான சேவையை முற்றிலும் நிறுத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஜனநாயக முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் இன்று முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.

வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலக அளவில், வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தலைவர்களின் (G-20) மாநாடு லண்டன் நகரில் தொடங்குகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதனை முடிவு செய்வதற்காக பா.ம.க பொதுக்குழு கூடியது. பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது, அதில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்க 2453 பேரும் தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க 117 பேரும் வாக்களித்தனர். 10 பேர் நடுனிலை வகித்தனர். ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு.
வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னால் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், உத்திரபிரதேசம் முராதாபாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
கட்சியின் தலைவி சோனியா காந்தி மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் குறிப்பிடும் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அசார் தெரிவித்தார்.

"தற்போது மக்களவை தேர்தல் தான் நடைபெறவுள்ளது,அடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற்றால், மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, கொல்கத்தாவை லண்டன் போல மாற்றிக்காட்டுவோம்", என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை கிலோ ரூ.3 விலையில் வழங்கப்படும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பெறுவோருக்கு தினமும் ரூ.100 கூலி வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் நலிவடைந்தோர் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும்.
முன்னேற்றம் தொடரும் - உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் சிறப்பான இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்த முன்னேற்றம் தொடரும்
மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.
பிலிபித் தொகுதியில் வருண் தான் வேட்பாளர் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது. டில்லியில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப்பொவதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் சர்மா தெரிவித்தார்.
லட்ச ரூபாய் நானோ கார் இன்று முறைப்படி அறிமுகம் ஆகிறது.அப்போது வனப்பகுதிக்குள் கள்ளத்தனமாக துப்பாக்கி வைத்திருந்த தேவராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி நரசிம்மாச்சாரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரிடமிருந்தும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்கிற ஆவல் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்களுக்கிடையே மட்டுமின்றி பெரும்பான்மையான தொண்டர்களிடையேயும் மேலோங்கியுள்ளது.
மொழி மற்றும் இனப்பாதுகாப்பு களங்களில் இருகட்சிகளும் தோழமையோடு பணியாற்றி வருகிறது. இதனால் சமூக நல்லிணக்க சூழல் வளர்ந்துள்ளது. இச்சூழல் தொடர வேண்டுமென்பதை விடுதலை சிறுத்தைகள் மனமாற விரும்புகிறது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறும் தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் விரும்புகிறது. தி.மு.க. அணியில் பா.ம.க.வும் இடம்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையோடும், தோழமையோடும் உளப்பூர்வமாக அழைப்பு விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.
போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.
விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.
ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.
தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



