Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

தமிழகம்: நீதிபதி பெயர் கூறி செல்பேசிகள்

Published on புதன், 25 மார்ச், 2009 3/25/2009 10:14:00 PM // , , , , ,

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள செல்பேசி விற்பனை கடையில் உதயகிரி என்ற 23 வயடு வாலிபர் விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.கடந்த 20ம் தேதி 12 மணிக்கு உதயகிரி கடையில் இருந்த போது, வாலிபர் ஒருவர் வந்தார். கடலூர் நீதிபதிக்கு மொபைல் போன் தேவைப்படுகிறது. கடையில் உள்ள ஐந்து மொபைல் போன்களை எடுத்து வந்தால் பார்த்து வாங்கிக் கொள்வார் எனக் கூறியுள்ளார்.

உதயகிரி கடையில் இருந்து 33 ஆயிரம் மதிப்புள்ள ஐந்து நோக்கியா மொபைல் போன்களை எடுத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஆட்டோவில் சென்றார். ஜட்ஜ் பங்களா ரோட்டில் உள்ள நீதிபதி குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார்.மொபைல் போன்களைக் கொடுங்கள் நீதிபதியிடம் காண்பித்துவிட்டு எது தேவை எனக் கேட்டு வருவதாகக் கூறி அருகில் நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றார்.இதுகுறித்து உதயகிரி கொடுத்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!