Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

வருண் குற்றவாளி : தேர்தல்

Published on திங்கள், 23 மார்ச், 2009 3/23/2009 03:50:00 AM // , , , , , , , ,

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வருண் குற்றவாளி என்று தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக் கிழமை இரவு அறிவித்தது. பாரதீய ஜனதா கட்சி வருணை தேர்தலில் நிறுத்தக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

29 வயதான வருண் தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்திரப் பிரதேசத்தின் பிலிபிட் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியதைத் தொடர்ந்து அது தொடர்பாக நேற்று 10 பக்க உத்தரவை வெளியிட்டது. வருணின் பேச்சு மிகவும் இழிவானது என்றும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக சன்டையை மூட்டிவிடும் ஆபத்தானது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மத உணர்வைப் புண்படுத்தியவர் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தால் ஒருவர் குற்றவாளி என அறிவிக்கப் படாதவரை அவரை தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவர் என அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டம் இடம் அளிக்கவில்லை எனவும், பாரதீய ஜனதா கட்சி வரும் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியி இவருக்கு இடம் அளிக்கக் கூடாது என தன்னுடைய எதிர்பார்ப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!