Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பறக்கும் விமானத்தில் குழந்தையைப் பெற்று குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்ற பெண்.

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 07:17:00 PM // , , , ,

நியூசிலாந்து (AFP) பறந்துகொண்டிருந்த விமானத்தின் கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் அங்கிருந்த குப்பை தொட்டியில் குழந்தையை போட்டு விட்டு சென்று விட்டார்.

போலீசாரும் பசுபிக் ப்ளூ விமான நிறுவன அதிகாரிகளும் தெரிவித்தாக நியூசிலாந்து தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி நேற்று ஒளிபரப்பானது.

விமானம் சுத்தம் செய்யும் பணியாளரால் விமானம் தரை இறங்கிய பின் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அக்குழந்தை கழிவறைத் தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற அவ்விமானத்தில் யாரும் குழந்தை பெற்றதாக யாதொரு சாத்தியக்கூறும் காணப்படவில்லை.

ஆனால் அப்பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விட்டதாக வந்து கேட்டபோது அப்பெண்ணின் பலவீனத்தாலும் ரத்தக் கறையுடன் காணப்பட்டதாலும் சந்தேகமுற்ற அதிகாரிகள் விசாரித்தபோது மேற்கண்ட விஷயம் தெரிய வந்தது.

தற்போது தாயும் குழந்தையும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!