Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவிற்கு மாற்றம்

Published on ஞாயிறு, 22 மார்ச், 2009 3/22/2009 03:55:00 PM // ,

IPL போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடப்பது உறுதியாகிவிட்டது. இன்று BCCI யின் அவசரக் கூட்டம் மும்பையில் நடந்தது. மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் போட்டிகள் நடைபெறுவதாக இருந்ததையொட்டி, போட்டிகளை தள்ளி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் BCCI யை கேட்டுக் கொண்டது. முதலில் போட்டிகள் ஒத்திவைப்பதாக கூறி வந்த BCCI, வியாபாரம் மற்றும் ஸ்பான்ஸர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேறு நாடுகளில் நடத்த ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, இங்கிலாந்தும் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக BCCI வட்டாரம் தெரிவிக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!