Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

புதுவை வந்த ராகுல் பேட்டி.

Published on புதன், 25 மார்ச், 2009 3/25/2009 09:46:00 PM // , , , , ,

இன்று விமானம் மூலம் சென்னை வந்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி. அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் புதுவை வந்த அவரிடத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர்:

வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,

வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்று, வருணின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!