Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் மூன்று கொரில்லாக்கள் கொல்லப் பட்டனர்

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 08:47:00 PM // , , , , ,

கஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராடும் இயக்கங்களைச் சேர்ந்த மூன்று கொரில்லாக்கள் இன்று கொல்லப் பட்டனர். கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் அருகே உள்ள ரங்வர் என்னும் வனப் பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் இவர்கள் கொல்லப் பட்டனர்.

இன்று நடந்த தேடுதலின்போது வனத்தைச் சுற்றியிருந்த இராணுவத்தினர் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் நடந்த துப்பாக்கிச் சன்டையில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரார் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!