Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Friday, April 11, 2025

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கியது கோவா!

ஜல்லிக்கட்டை சட்டபூர்வமாக்கி கோவா மாநில சட்டமன்றத்தில் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பானாஜியில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை கோவாவில் தடை செய்திருந்தது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரெஜினால்டோ கொண்டு வந்த ஒரு நபர் தீர்மானத்தை அடுத்து மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கட்டு சட்டபூர்வமாக்கப் பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்த ரெஜினால்டோ பாரம்பரியமான இந்த விளையாட்டு தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டுப் பேசினார். விவாதத்தின் இடையில் குறுக்கிட்ட அவைத் தலைவர் பிரதாப் சிங் ரானே, ஜல்லிக் கட்டின் மூலம் மிருகங்கள் வதை செய்யப்படக் கூடும் என்று கூறினார். எதிர்கட்சித் தலைவர் மனோகர் பரிகார் மிருகங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மிருகங்களின் பாதுகாப்புகளைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும் என்ற குறிப்புடன் ஜல்லிக்கட்டை அனுமதித்து சட்டமியற்றப் பட்டது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!