Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

மாணவிகளை வன்புணர்ந்ததாக தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது!

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 01:25:00 PM // , , , , ,

ஷிம்லாவில் உள்ள காது கேளாதோர் மற்றும் ஊமைகளுக்கான பள்ளியில் 14 முதல் 16 வயதுடைய ஆறு மாணவிகளை கடந்த ஒரு ஆண்டு காலத்தில் வன்புணர்ந்ததாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளியின் தற்காலிக தலைமையாசிரியரான விஜய் மற்றும் ஆசிரியர்கள் தினேஷ் மற்றும் வினோத் ஆகியோதை வியாழக் கிழமையன்று கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்தனர். மேலும் அமர்ஜித் என்ற மற்றொரு குற்றவாளியையும் தேடி வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் விடுதியில் 22 பேர் படித்து வருவதாகவும், விடுதியில் சமையல் பணி செய்யும் பெண் இரவில் வீடு திரும்பி விடுவார் என்றும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக விடுதி கண்கானிப்பாளர் இல்லாத நிலையில் விடுதியில் தங்கியிருப்போர் மீது செக்ஸ் கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!