Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

வருணைக் கைவிடும் பா.ஜ.க.!

Published on சனி, 21 மார்ச், 2009 3/21/2009 12:22:00 AM // , , , ,

சர்ச்சைக்குரிய விதத்தில் வருண் பேசியதற்கு பா.ஜ.க., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ.க.,வுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது .

இந்த நோட்டீஸ் குறித்து கருத்து ‌தெரிவித்துள்ள பா.ஜ.க., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!