மாவோவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி.
பீகாரில் மாவோவாதிகளின் செல்வாக்கு அதிகமுள்ள பாட்னாவுக்கு அருகிலுள்ள பகுதியில் 100க்கு மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையம் மீது நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். பாட்னாவிலிருந்து 80 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதே பகுதியில் கடந்த வாரம் மாவோவாதிகளின் துப்பாக்கி சூடில் 15 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





