Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கஷ்மீரில் 3 இராணுவத்தினர் கொலைக் குற்றவாளியாக அறிவிப்பு!

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 10:25:00 PM // , , , , , ,

ஜம்மு கஷ்மீரில் கடந்த மாதம் பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்ற குற்றச் சாட்டை விசாரிக்க அமைக்கப் பட்ட விசாரணை நீதி மன்றம் மூன்று இராணுவத்தினர் குற்றம் செய்தததாக அறிவித்தது. அவர்கள் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தது.

ஸ்ரீநகரில் 15ஆம் கம்பெணியின் பிரிகேடியர் தலைமையிலான குழு இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஒரு துணை கமிஷனர் மற்றும் இரு இராணுவ வீரர்கள், தங்களுடைய ஆயுதங்களை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியது தெரிய வந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. நீதிமன்ற விசாரணை விரைவில் துவங்கும். குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் சிறைத் தண்டனை இருக்கக் கூடும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.

இராணுவம் மனித உரிமைகளில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை இவர்களுக்கு வழங்கும் தண்டனை மூலம் அறியலாம் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

பிப்ரவரி 21ஆம் நாள் கஷ்மீர் பள்ளத்தாக்கில் இரண்டு இளைஞர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை அடுத்து கஷ்மீர் முழுவதும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்ங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, மத்திய அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!