Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

தீவிரவாதி கசாப்பின் வக்கீல் அஞ்சலி விலகல்!

Published on செவ்வாய், 31 மார்ச், 2009 3/31/2009 11:18:00 AM // , , , , ,

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாட மராட்டிய மாநில இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பெறப்பட்ட 17 வக்கீல்களின் பட்டியலில் இருந்து புனேயைச் சேர்ந்த பிரபல மூத்த வக்கீல் அஞ்சலி வாக்மாரே என்பவரையும், அவருக்கு உதவியாக ஜுனியர் வக்கீல் ஒருவரையும் நியமனம் செய்து, செசன்சு நீதிபதி தகில்யானி நேற்று உத்தரவிட்டிருந்தார்.

தீவிரவாதி கசாப்பின் சார்பாக வாதாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் அஞ்சலி வாக்மாரே வீடு முன்பு சிவசேனா தொண்டர்கள் கோஷம் எழுப்பி, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கசாப்பிற்க்காக வாதிடுவதிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் அஞ்சலி வாக்மாரே தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!