Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Sunday, April 13, 2025

10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

Published on செவ்வாய், 24 மார்ச், 2009 3/24/2009 08:34:00 PM // , , , , , ,

10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. அமிர்தசரஸ் நகரில் புனிதத் தளம் ஒன்றின் அருகே ஹீரா சிங் என்பவரிடம் 10 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப் பட்டது.

மத்தியப் புலனாய்வுத் துறையின் டில்லி பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ஹீரா சிங் இந்த ஹெராயினை அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு எடுத்துச் செல்லவிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்த புலனாய்வு நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய புலனாய்வுத் துறையின் தகவல்படி போதைப் பொருள் கடத்தலில் பஞ்சாப் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!