Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Monday, April 14, 2025

கூட்டணி ஒப்பந்தம் 2 நாட்களில் - ம.ம.க.

Published on சனி, 28 மார்ச், 2009 3/28/2009 02:43:00 AM // , , , ,

தொகுதி ஒதுக்கீடு குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். ம.ம.க தலைவர்கள் நேற்று தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, "நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதல்வரிடம் கூறினோம். எங்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிப்பதாக அவர் பதிலளித்தார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என்று கூறினார்.

ஜவாஹிருல்லாவுடன், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோரும் முதல்வர் கருணாநிதியை சந்திக்க உடன் சென்றிருந்தனர்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!