Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மகளை வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக தந்தை கைது!

Published on ஞாயிறு, 29 மார்ச், 2009 3/29/2009 12:08:00 PM // , , , , ,

கொலாம்பியாவில் தன்னுடைய மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வன்புணர்ந்து 11 குழந்தைகளைப் பெற்றதாக எழுந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

கொலாம்பியாவில் அதிர்வலைகளை எழுப்பியுள்ள இக்குற்றச் சாட்டிற்கு ஆளான 58 வயது மனிதர் தான் நீதிமன்றத்திற்கு வரும்போது காவல் துறை மற்று இராணுவ பாதுகாப்பு வேண்டும் என்று கோரியுள்ளார்.

தற்போது 30 வயதாகும் அந்தப் பெண் தான் 10 வயதை அடையும் முன்பிருந்தே தன்னுடைய தந்தை தன்னை வன்புணர்ந்து வந்ததாகக் குற்றம் சுமத்தினார்.

தாங்கள் ஒருவரையொருவர் விரும்புவதால் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்தப் பெண் தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டவர் நீதிமன்றத்தில் கூறினார்.

தான் அவரை தந்தையைப் போன்றே மதிப்பதாகவும், அவர் தன்னுடைய தந்தைதான் எனவும் அந்தப் பெண் கூறினார். தன்னை தன்னுடைய தந்தை வன்புணர்ந்ததன் மூலம் 11 குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் மூன்று குழந்தைகள் இறந்ததாகவும் அவர் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!