Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!

போலி என்கவுண்டர்கள் நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


தற்பாதுகாப்புக்காகவே கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது எனில், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான சக்தியைக் காவல்துறையினர் உபயோகிக்கக் கூடாது எனவும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவர்களுக்கு எவருடைய உயிரையும் எடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நாயைச் சுட்டவரை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீசார்

Published on: செவ்வாய், 24 மார்ச், 2009 // , , , , ,
ஸ்போகேன் -வாஷிங்டன். அதிவேகமாகக் கார் ஓட்டியவரை போலீசார் துரத்திச் சென்றதைக் கண்ட கார் ஓட்டுனர் காட்டுப் பகுதியில் காரைப் போட்டு விட்டுத் தப்பி ஓடினார். அவரைப் பின் தொடர்ந்து போலீஸ்காரரும் அவருடைய நாயும் சென்ற போது கார் ஒட்டுனர், ஜானி லாங்கஸ்ட் நாயைச் சுட்டுவிட்டார். அதைக் கண்ட போலீஸ்காரர் உடனடியாக கார் ஓட்டுனரை சுட்டதில் படுகாயாமடைந்த அவர் மருத்துவமனையில் மரனமடைந்தார்.

போலீஸ் நாய் தற்போது கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதி மன்ற கலவரம் : காவல் அதிகாரிகள் இடைநீக்கம்!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி வழக்கறிஞர்கள் - காவலர்கள் இடையே நடந்த மோதல் விவகாரம் தொடர்பாக இரண்டு காவல்துறை அதிகாரிகளை இடை நீக்கம் செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை காவல் துறை கூடுதல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர் ராமசுப்ரமணியம் ஆகியோரை இடை நீக்கம் செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கறிஞர்கள் உடனடியாக பணிக்குத் திரும்புமாறும் பணித்துள்ளது.

கோவை: 4 காவல் உயரதிகாரிகள் இடமாற்றம்

Published on: வியாழன், 12 பிப்ரவரி, 2009 // , , , , ,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை உத்தேசித்து, ஒரே இடத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் இம்மாதம் 22ம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. அதன் எதிரொலியாக கோவையின் நான்கு உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜேந்திரன், கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.பேரூர் துணை கண்காணிப்பாளராக பணியாற்றும் குமாரசாமி, கோவை மேற்கு சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராகவும், அங்கிருந்த சுந்தரவடிவேல் கன்னியா குமரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.கோவை மத்திய பகுதி சட்டம் ஒழுங்கில் பணியாற்றிய சுந்தரசேனன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல கோவை மண்டலத்தில் மேலும் 13 ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஒரிசா காவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்

Published on: செவ்வாய், 10 பிப்ரவரி, 2009 // , , , , ,
ஒரிசாவில் சுமார் 40 ஆயிரம் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் பொறுப்புகளில் உள்ள காவலர்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாய் அச்சுறுத்தி உள்ளனர்.

6ஆவது ஊதியக்குழு ஆணையத்தின் பரிந்துரைப்படி தங்கள் ஊதியங்களை உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிவரும் அவர்கள், திங்கள் கிழமை காலை 6 மணி முதல் 6 மணிவரை உணவு எதுவும் உண்ணாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். காவல்துறையின் கீழ்மட்டத்தில் உள்ள இவர்கள் ஹவில்தார், கான்ஸ்டபிள் மற்றும் சிப்பாய் சங்கம் என்ற பெயரில் செயல்படும் இவர்கள் தங்கள் சட்டமன்றப் பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் வழக்கம்போல் மேற்கொண்டனர்.

நோய்வாய்ப்பட்டுள்ள தங்கள் குடும்பத்து முதியவர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் தவிர இந்த காவலர்களின் குடும்பத்தினரும் நேற்று உண்ணா நிலையை மேற்கொண்டதாக சங்கத் தலைவர் பத்மதேவ் பெஹேரா கூறினார்.

தங்கள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாவிட்டால் சங்கப் பிரதிநிதிகள் கூடி வேலை நிறுத்தத்திற்கான நாளை முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றும் இவர் கூறினார். அரசிடம் பல முறை வலியுறுத்தியும் எங்கள் கோரிக்கையை அரசு பரிசிலீக்காததால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

ஒரிசாவில் கான்ஸ்டபிள் நிலையிலுள்ள காவலர் மாதம் ரூ. 3000 மட்டுமே சம்பளமாகப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!

Published on: சனி, 7 பிப்ரவரி, 2009 // , , , , ,
போலி என்கவுண்டர்கள் நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்பாதுகாப்புக்காகவே கொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது எனில், அதற்கான உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான சக்தியைக் காவல்துறையினர் உபயோகிக்கக் கூடாது எனவும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமையுள்ளவர்களுக்கு எவருடைய உயிரையும் எடுப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஆறு வயது சிறுமியைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு.

Published on: புதன், 4 பிப்ரவரி, 2009 // , , , , ,

உத்தரபிரதேசத்திலுள்ள இட்டாவ எனும் இடத்தில் திருடியதாக அழைத்து வரப்பட்ட ஆறு வயது தலித் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, சப் இன்ஸ்பெக்டர் சியாம்லால் யாதவ் பணி நீக்கம் செய்யபட்டார். மற்றொருவரான சந்திரபான் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சிறுமியிடம் எஸ்.பி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தையில் வைத்து தனது பையிலிருந்து 280 ரூபாயைத் திருடியதாக கோமள் என்ற சிறுமியை அஞ்சு கதாரிய என்ற பெண் ஜஸ்வந்த்பூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்த வேளையில், காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சிறுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!