Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை!

Published on செவ்வாய், 31 மார்ச், 2009 3/31/2009 10:58:00 PM // , , , ,

மக்களவை தேர்தலில் போட்டியிட சஞ்சய்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத், தன் மீதான தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் சட்டம் தடை விதிக்கிறது. இதனை மனதில் வைத்தே, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்க சஞ்சய் தத் மனு அளித்திருந்தார்.

மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இது தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலி விடும்" என கூறியது.

முன்னதாக, சஞ்சய் தத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டால் தேர்தல் களம் கிரிமினல்களின் கூடாரமாகி விடும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.

தற்போதைய மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர்களில் சுமார் 57 பேர் கிரிமினல் குற்றபின்னணி கொண்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிக அதிகபட்சமாக 27 பேர் பாஜக சார்பாக களமிறங்குபவர்களாவர்.

1 கருத்து

  1. பாராளுமன்றம் கிரிமினல்களின் புகலிடமாக மாறி வருகிறது என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!