Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இரானுவ வீரர்களை மதவெறியூட்டினர்.

Published on செவ்வாய், 24 மார்ச், 2009 3/24/2009 12:25:00 PM // , , , , , ,


காஸா போரின்போது இஸ்ரேலிய மத குருக்கள் இராணுவ வீரர்களிடம் இது நமது மத சம்பந்தப்பட்ட போர் நமது மதம் அல்லாதவருக்கு எதிரான போர் என்பதை மனதில் நிறுத்தி மிக ஆக்ரோஷமாக போரிடும்படி வெளிப்படையாக ஒவொரு இராணுவ முகாமுக்கும் சென்று பிரச்சாரம் செய்தனர் என்று ஹாரட்ஸ் என்ற இஸ்ரேலிய இடது சாரிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் போர் முடிந்து திரும்பிய வீரர்களுக்கான மறு சீரமைப்பு முகாம் ஒன்றில் நடந்த கலந்துரையாடலில் பேசிய வீரர்கள் " இது கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட பூமி, இதை ஆக்ரமிக்கும் நமது வழியில் வந்து நிற்கும் யூதர் அல்லாத மற்ற மதத்து மக்களை கடுமையாக போரிட்டு அப்புறப்படுத்துவதில் எல்லா வழிகளையும் கையாள வேண்டும் என்றும் அப்பாவி பொதுமக்களைக் கண்ட இடத்தில் சுடும்படி தங்களுக்கு படைத்தளபதியே உத்தரவிட்டதாகவும்" கூறியது ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் குழுக்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெளியான சில ரகசிய தகவல்களை உறுதிப்படுத்திய இஸ்ரேலிய இராணுவ அகாடமியின் இயக்குநர் கூறுகையில், 22 நாட்களாக நடந்த இராணுவ நடவடிக்கை எங்களது மதக்கடமையை நிறைவேற்றியது போன்று மன அமைதியை நாங்கள் அனுபவிக்க முடிகிறது என்றார்.


அவிவ் என்ற பெயரிட்ட கிவாத் பிரிகேட்டில் படை உறுப்பினராக இருந்த ரம்ஸ் என்பவர் சொல்லும்போது "ஒவ்வொரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்று இருப்பவர்கள் யாவரையும் கொன்று குவிக்கும்படி அவரின் தளபதி உத்தரவு பிறப்பித்ததாகவும்" அதன் படி செயலபடுவதில் அனைத்து வீரர்களும் மிக்க மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.


இஸ்ரேலிய வீரர்களின் கொடூரங்கள் பற்றி வெளியான செய்திகள் குறித்து கருத்துக்கூறிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பராக் கூறுகையில் "இஸ்ரேலின் இராணுவம் உலகத்திலேயே மிகச்சிறந்த, ஒழுக்கம் மிக்க, மிக நேர்மையான இராணுவம் என்றும் அதற்கு இனையாக உலகத்தில் வேறு நேர்மை மிக்க இராணுவம் கிடையாது" என்றும் கூறினார். வேறு ஏதும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதுபற்றி விசாரிப்போம் என்றார்.

மோஷே எனும் வீரரின் கூற்றுப்படி நாங்கள் நடந்து கொள்ளும்முறை பற்றி எங்களிடம் கடுமையான முறையில் விசாரனை ஏதும் செய்யப்படுவதில்லை. இதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளப் போவதுமில்லை. போர்களில் இதெல்லாம் சாதாரணம் என்றார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!