Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Saturday, April 12, 2025

வருண் மீது தேர்தல் கமிசன் பிடி இறுகுகிறது!

Published on வெள்ளி, 20 மார்ச், 2009 3/20/2009 03:08:00 AM // , , , , , ,

தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளையும் சட்டத்தையும் மீறி முஸ்லிம்களுக்கு எதிராக பேசிய வருணின் மீதான பிடியைத் தேர்தல் கமிசன் இறுக்குகிறது. தேர்தல் கமிசன் அனுப்பிய விளக்க நோட்டீஸிற்கு, தனது பேச்சைத் திரித்துள்ளனர் எனவும் தான் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை எனவும் வருண் விளக்கமளித்திருந்தார். ஊடகங்களில் வெளியான வருண் பேச்சு அடங்கிய வீடியோ டேப்பில் குளறுபடி நடந்துள்ளது என்று வருண் கூறுவாரேயானால் அதனை அவர் தான் நிரூபிக்க வேண்டும் என தேர்தல் கமிசன் கமிசனர் திரு. என். கோபாலசாமி கூறினார். மேலும், அதனை நிரூபிப்பதற்கு வருணுக்கு 24 மணி நேர கால அவகாசம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



தேர்தல் கமிசனின் உறுதியான இந்நிலைபாடு, வருணுக்கு எதிராகவும் பாஜகவுக்கு எதிராகவும் நடவடிக்கை வரும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!