Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

நால்வரைக் கொலை செய்த வழக்கில் 46 பேருக்கு வாழ் நாள் சிறை!

மேற்கு வங்கத்தில் நான்கு பேரை கொலை செய்த வழக்கில் 46 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டு அவர்களுக்கு வாழ் நாள் சிறைத் தண்டனை அளித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1987ஆம் ஆண்டு பீர்பூம் மாவட்டத்தில் லெனினிய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் நால்வரைக் கொலை செய்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்கள் மூவர் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த 43 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி தீபக் சாஹா ராய் இந்த தீர்ப்பை அளித்தார்.

1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பீர்பூம் மாவட்டத்தில் போல்பூர் காவல் எல்லைக்குட்பட்ட முலுக் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்றது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!