Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை!

Published on வியாழன், 19 மார்ச், 2009 3/19/2009 09:31:00 PM // , , , , ,

சரவணபவன் சங்கிலித்தொடர் உணவகங்களின் உரிமையாளர் ராஜகோபால். அண்ணாச்சி என்று அழைக்கப்படுபவர். தன்னிடம் பணிபுரிந்த சென்னை வேளாச்சேரியை சேர்ந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட சரவணபவன் உணவக அதிபர் ராஜகோபால், சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதற்காக வழக்கு விசாரணை நடந்து கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மு‌றையீடு செய்திருந்தார். அந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் பானுமதி, மிஸ்ரா அடங்கிய குழுமம், ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!