Inneram.com

24x7 News and beyond...

Inneram.com
Tuesday, April 15, 2025

பி எல் போட்டிகளை நடத்த தெ. ஆப்ரிக்கா

Published on செவ்வாய், 24 மார்ச், 2009 3/24/2009 03:11:00 PM // ,

இந்தியாவில் நடக்க இருந்த ஐ பி எல் போட்டிகள், வேறு நாட்டில் நடத்த போவதாக பிசிசிஐ அறிவித்த பின், தங்கள் நாடுகளில் நடத்த, நீயா, நான என தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் போட்டி போட்டன. இப்பொழுது தென் ஆப்ரிக்காவில் தான் போட்டிகள் நடக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் பருவநிலையயை கருத்தில் கொண்டு பிசிசிஐ இம்முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஐ பி எல் போட்டிகளை நம்பி நுற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பல வகையில் தங்களின் தயாரிப்புகளை விளம்பரம் செய்து இருந்தன. இவைகளின் நிலமைகள் எல்லாம் என்ன என்பது போக போகத்தான் தெரியும். ஏற்கனவே, உலக நிதி நெருக்கடியில் பல நிறுவனங்கள், ஆட் குறைப்பு செய்து வரும் நிலையில், ஐ பி எல் போட்டிகள் வேறு நாட்டில் நடக்கும் போது நிலைமை மேலும் மோசமாகலாம்.

+ Discussion
Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!