Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பயணிகள் மீதான சந்தேகத்தால் விமானம் தரையிறக்கம்.

Published on செவ்வாய், 31 மார்ச், 2009 3/31/2009 07:52:00 PM // , , , , , ,

இன்று காலை 7 மணிக்கு டெல்லியிலிருந்து கல்கத்தா நோக்கி ஏர் இந்தியா விமானம் 104 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பயணம் செய்த 3 பயணிகளின் நடவடிக்கையில் விமான பணிப்பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டதால்
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மீண்டும் விமானத்தைத் தரை இறக்க விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து வானில் பறந்த விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த 3 நபர்களிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இவர்கள் அனைவரும் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதும், இம்பால் புறப்பட்டு சென்றதும் தெரிய வந்தது. எனவே, அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். 2 மணி நேர தாமதத்துக்கு பிறகு மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!